தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளி திருநாளில் நவம்பர் 4 அன்று ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகி தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.
இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னதாக தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு.
அப்போதே.. கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில் தங்கள் குடும்ப நிறுவன படம் ரிலீஸ் சமயத்தில் இப்படியொரு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
ஆனாலும் ஷாப்பிங் மால் பஸ் ரயில் டாஸ்மாக்குகளில் 100% கூட்டம் அலைமோதியது உங்களுக்கு தெரியவில்லையா என மற்றொரு தரப்பினர் வாதம் செய்தனர்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.
இந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இதனால் பட வசூல் பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளதால் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சில சிம்பு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி படத்திற்கு ஒரு நியாயம்.? சிம்பு படத்திற்கு ஒரு நியாயமா? என கேட்டு வருகின்றனர்.
இதனிடையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில்…
”உலகிலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்கு மக்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
STR fans angry on tamil nadu govt decision