தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவைப் பொறுத்தவரை நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுப்பது இசை தான்.
பின்னணி இசை கொடுக்கப்பட்டால் தான் நம்மால் அந்த காட்சிகளுடன் ஒன்றி கதையுடன் பயணிக்க முடியும்.
சோக கீதங்கள் ஆகட்டும்.. சந்தோஷ ராகங்கள் ஆகட்டும்.. எதுவாக இருந்தாலும் அந்த காட்சியின் வழியையும் அந்த காட்சியின் சந்தோஷத்தையும் கொடுப்பதும் இசை தான்.
அந்த வகையில் நவம்பர் 11ல் வெளியான ‘மிரள்’ படத்தில் தன் இசையால் நம்மை மிரள வைத்தவர் தான் எஸ் என் பிரசாத்.
சமீப காலமாக இவரது பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்ட வருகிறது.
‘வீரா’, ‘காட்டேரி’, ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ உள்ளிட்ட பல படங்களிலும் தன் இசையால் கவர்ந்தவர் தற்போது நம்மை மிரள வைத்துள்ளார்.
சக்திவேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன் நடித்த ‘மிரள்’ படத்தில் இசையால் மிரட்டி காட்சிகளுக்கு உயிரோட்டி இருந்தார்.
முக்கியமாக இடைவேளைக்குப் பிறகு இவர் கொடுத்த பின்னணி இசை ரசிகர்களை சீட்டு நுனியில் அமர வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
தன் பின்னணி இசையால் நம்ம மிரள வைத்த SN பிரசாத் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துவோம்..
SN Prasad A new promising Music composer