‘வீரா’ & ‘படையப்பா’ பாணியில்..; ‘ஜெயிலர்’ பட சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்ஸ்

‘வீரா’ & ‘படையப்பா’ பாணியில்..; ‘ஜெயிலர்’ பட சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி – கடலூர் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் நடந்து வருகிறது.

தற்போது, சூட்டிங் 50% நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை அடுத்தாண்டு 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன் ரஜினி நடித்த வீரா, அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்கள் தமிழ் புத்தாண்டு சமயத்தில் (ஏப்ரல்) வெளியானது குறிப்பிட்டத்தக்கது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உடன் இணையும் விஜய் சேதுபதி

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உடன் இணையும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி அடுத்ததாக மற்றொரு ஜாம்பவானுடன் இணைகிறார் என்று சூடான செய்தி இப்போது
வந்துள்ளது, அவர் வேறு யாருமல்ல, பல தேசிய விருதுகளை வென்ற பவர்ஹவுஸ் நடிகரான மம்முட்டி தான்.

இந்தப் படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி தனது பிஸியான கால அட்டவணைக்கு மத்தியில் இந்த படத்திற்காக உடனடியாக தேதிகளை ஒதுக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மீதமுள்ள நடிகர்கள், குழுவினர் விவரம் விரைவில் வெளியாகும்.

ராம் சரண் படத்துக்காக அதிரடியான அறிமுக காட்சியை படமாக்கிய இயக்குனர் சுகுமார்

ராம் சரண் படத்துக்காக அதிரடியான அறிமுக காட்சியை படமாக்கிய இயக்குனர் சுகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தயாரிப்பின் போது மெகா பவர் ஸ்டார் ராம் சரணை வைத்து சுகுமார் தனது படத்தின் தொடக்க காட்சியை படமாக்கினார் என்று கூறப்படுகிறது.

அந்த சமயம் சரண் உடலை மெருகேற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவருடன் ஒரு காட்சியை படமாக்கினார் இயக்குனர் சுகுமார்.

கடந்த ஆண்டு, ராஜமௌலியே அந்தக் காட்சி என்னவென்று தனக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.

மேலும் அச்செய்தியை நான் வெளியிட்டால் , சுகுமாருக்கு மாரடைப்பே வந்துவிடும் என பதில் அளித்தார்.

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்த ரஜினியின் ‘தர்பார்’ பட நடிகர்

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்த ரஜினியின் ‘தர்பார்’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இதில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்பட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் இதில் நடித்து வருவதாக அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

‘இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போட்டு தான் நடித்து வருவதாக போட்டோவை பகிர்ந்துள்ளார் யோக்ராஜ்.

இவர் ஏற்கனவே பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று அஜித் படங்களை இயக்கியவருக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

மூன்று அஜித் படங்களை இயக்கியவருக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களை இயக்கியவர் எச். வினோத்.

தற்போது அஜித்தின் ‘துணிவு’ படத்தையும் இயக்கியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

தொடர்ந்து அஜித் படங்களை இயக்கிய வினோத்துக்கு தற்போது கமல்ஹாசன் வாய்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என கூறப்படுகிறது.

சமந்தாவை தாக்கியுள்ள மயோசிட்டிஸ் நோயின் அறிகுறிகள் என்ன.?

சமந்தாவை தாக்கியுள்ள மயோசிட்டிஸ் நோயின் அறிகுறிகள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவும்…. மயோசிட்டிஸ் நோய் அறிகுறிகளும்…

சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது.

எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக உள்ளது.

நான் விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என மருத்துவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் என இரண்டையும் எதிர்கொண்டுள்ளேன்.

இந்த நாளை என்னால் எதிர்கொள்ள முடியாது எனத் தோன்றிய போது அதுவும் கடந்து சென்றிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு நாளில் குணமாகி விடும் தருணத்தை நெருங்கி விட்டேன் என்று தான் நினைக்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். மேலும் சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்திருந்தார்.

சமந்தா தற்போது பகிர்ந்திருக்கும் இந்த மயோசிட்டிஸ் என்று அழைக்கப்படும் தசை அழற்சி நோய் என்றால் என்ன? அது எப்படிப்பட்ட பிரச்னைகளை கொடுக்கும் என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது.

அதாவது, மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் என்பது, உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் என்று பொதுவாகக் கூறலாம். இந்நோய்க்கான காரணம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் வேறுபாடு.

இந்த நோயால் பாதிக்கப்படும் ஒருவரின் உடல் தசைகள் மீது அவரது நோய் எதிர்ப்பாற்றல் நடத்தும் தாக்குதலால் தசைகள் பாதிக்கப்படும்.

இது பொதுவாக கை தசைகள், தோள்பட்டை, கால்கள், இடுப்பு, அடிவயிற்று தசைகளைத்தான் தாக்கும். இந்த நோய் தாக்கினால், காய்ச்சல், எடை குறைப்பு, மூட்டு வலி, மயக்கம், தசைகளில் வலி உருவாகும்.

நோயின் ஆரம்பக்கட்டத்தில், பாதிக்கப்பட்டவர் எழுந்து நடக்கவே சிரமப்படுவார். நோய் தீவிரமாகும் போது அமர்ந்திருந்தால், எழுந்து நிற்கவும், உறங்கும் போது தனது நிலையை மாற்றவும் கூட சிரமப்படுவார்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த பாதிப்பு உடலில் இதர தசைப்பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உண்டு. இதனால் திரவ உணவுகளைக் கூட விழுங்க முடியாமல் அவதிப்படக்கூடும். உரிய சிகிச்சை அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்டவரின் சுவாச மண்டலங்களையும் தாக்கி, நோயாளியால் மூச்சு விட முடியாத நிலையும் ஏற்படலாம்.

ஒரு சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றால் ஏற்படும் இருமல், சளி போன்ற தொந்தரவுகள் கூட ஒரு வகையான தசை அழற்சி நோயை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதாம். அதையும் தாண்டி, சில வகை பாக்டீரியா மற்றும் இதய நோய் சார்ந்த மருந்துகளும் தசை அழற்சியை ஏற்படுத்துகிறதாம்.

ஆனால், இந்த தசை அழற்சி எனப்படும் மயோசிட்டிஸ் நோயை தடுக்க எந்த வழியும் இல்லை. இது ஒரு உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் மாறுபாடு. இதற்கு உரிய காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகையால், இதனை வராமல் தடுப்பது என்பது இயலாத காரியம் என்றும் மருத்துவத் துறை கூறுகிறது.

இந்த நோய் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. யாருக்கேனும் இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மூட்டு வாத நோய் நிபுணர்களை ஆலோசிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதாவது, உடலில் பலவீனம், தொடை அல்லது தோள்பட்டை தசைகளில் பலவீனம், சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்படுவது போன்றவைதான் அறிகுறிகள் என்கிறார்கள்.

தசை அழற்சி நோயை தடுக்க முடியாது என்றாலும், சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தொடங்கினால், மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சியை நிச்சயம் குணப்படுத்தலாம்.

More Articles
Follows