தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நயன்தாரா, யோகி பாபு இணைந்து நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.
இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்த படத்தில் ஒரு பாடலை எழுத அனுமதியளித்திருந்தார்.
இவர்கள் இருவரும் விஜய் டிவியில் பணியாற்றியபோது நண்பர்கள் தானாம்.
இந்நிலையில் கனா படத்திற்கு பிறகு ரியோ நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தை முடித்துவிட்டு அடுத்து தயாரிக்கவுள்ள பட இயக்கும் வாய்ப்பை தன் நண்பன் நெல்சன் திலீப்குமாருக்கு அளிக்க இருக்கிறாராம்.
‘கனா’ படத்தில் தன் கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.