தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கு முன்பு ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் ‘பீஸ்ட்’ படத்துக்கு பின்னர் சமூக வலைத்தளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தார்.
அதிலும் ‘விக்ரம்’ படம் வெளியான போது லோகேஷை பாராட்டியவர்களை விட நெல்சனை கேலி செய்தவர்களே அதிகம்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த விகடன் விருது விழா ஒன்றில் நெல்சன் மற்றும் லோகேஷ் இருவரும் வரவேற்கப்பட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது.
இவ்விழாவில் லோகேஷை மட்டும் பாடி கார்ட்ஸ் அழைத்து சென்றனர். ஆனால், நெல்சன் மட்டும் யாரும் இல்லாமல் தனியாக சென்றார்.
இங்கே தொடர் வெற்றிக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும் எனவும் இயக்குனர்களிடையே பாரபட்சம் காட்டுகின்றனர் எனவும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Nelson Dilipkumar insulted in Ananda Vikatan award event