ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த நடிகர் சிம்பு

ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த நடிகர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu latest stills2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ கிரிக்கெட் போட்டி’ விரைவில் நடைபெறவுள்ளது.

இதில் ஒரு அணியான ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, ‘மதுரை மைக்கல்’ சிலம்பரசன், அனிருத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன், ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் தமன், அப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு பேசியதாவது…

“ரயில் பயணத்தில் ‘வித் அவுட்’ என்னும் ஒன்று இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியதே கிரிக்கெட் தான்.

மாநில அளவில் நான் பங்கேற்க இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக, ரயிலில் பயணச்சீட்டு கூட இல்லாமல் நான் பயணித்து இருக்கிறேன்.

அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது எனக்கு எல்லையற்ற ஈர்ப்பு உண்டு.

கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் சாருடன் நான் இந்த மேடையில் நிற்பேன் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை.

இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய நண்பர் தயாநிதிக்கு நன்றி.

‘ஆட்டைக்கு ரெடியாக இருக்கும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணி என்றுமே “சிறப்பு” என்று பேசினார் சிம்பு.

பஞ்ச தந்திரம் பார்ட் 2; பிள்ளையார் சுழிபோட்ட கமல்

பஞ்ச தந்திரம் பார்ட் 2; பிள்ளையார் சுழிபோட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhassan‘நான் ஈ’ புகழ் சுதீப் நடித்து நாளை வெளியாகவுள்ள முடிஞ்சா இவன புடி படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

இதற்கான கதை கருவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே கமல்ஹாசன் தானாம்.

முதல் பாகத்தில் நடித்த ஐந்து மனைவிகளை அவர்களின் கணவன்மார்கள் பொய் சொல்லி ஏமாற்றியிருப்பார்கள்.

எனவே இந்த பாகத்தில் ஏமாற்றிய கணவன்களை மனைவிகள் பழிவாங்குவது போல் கதையமைக்குமாறு கே.எஸ்.ஆரிடம் சொல்லியிருக்கிறாராம் கமல்.

எனவே விரைவில் நாம் எப்பொழுதும் சிரித்து மகிழ அடுத்த படம் ரெடியாகிவிடும்.

சௌந்தர்யா ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா.?

சௌந்தர்யா ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthஇந்தியாவின் முதல் மோசன் கேப்சரிங் படமாக கோச்சடையான் உருவாகியது. 2014ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், நாகேஷ் நடித்த இப்படத்தை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.

தற்போது தனது அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டராம்.

இப்படம் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்து விட்டதால், விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

‘லிங்கா’ வலையில் மாட்டிக் கொண்ட ‘முடிஞ்சா இவன புடி’

‘லிங்கா’ வலையில் மாட்டிக் கொண்ட ‘முடிஞ்சா இவன புடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mudinja ivana pudi movie stills கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.

ராக்லைன் வெங்கடேஷின் நண்பரான சூரப்பா பாபு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் லிங்கா தொடர்பான பிரச்சினையில் இப்படம் சிக்கிக் கொண்டுள்ளது.

லிங்காவின் நஷ்ட தொகையை மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தரவேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள்.

இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம், என்று பிலிம்சேம்பர் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ‘எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ என்று சென்னை விருகம்பாகம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் இது தொடர்பாக அருள்பதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் சிங்காரவேலன்.

காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள அம்மனுவின் புகைப்படம் இதோ….

police complaint letter

மணிரத்னம் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸாக கார்த்தி

மணிரத்னம் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸாக கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siruthai karthiகார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள காஷ்மோரா இவ்வருட தீபாவளி விருந்தாக வெளி வருகிறது.

இதனையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் பைலட்டாக நடித்து வருகிறார் கார்த்தி.

இவற்றை தொடர்ந்து தன் அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டாராம்.

சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் இதில் போலீஸ் ஆக நடிக்கிறாராம்.

காஷ்மோரா படத்தை தொடர்ந்து, டீரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை எஸ்ஆர் பிரகாஷ், பிரபு இருவரும் தயாரிக்கின்றனர்.

தனுஷ் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி ஆண்ட்ரியா

தனுஷ் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and andreaவெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.

இதனை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

தற்போது முதல் பாகம் உருவாகி வருகிறது. இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய்சேதுபதியின் மனைவியாக நடிக்கிறாராம் ஆண்ட்ரியா.

மேலும் தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் நட்சத்திர பட்டாளங்கள் இதில் இணையும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows