தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வசனங்களே இல்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மெர்குரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால், கடந்த 35 நாட்களாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை.
இருந்தபோதிலும் தடையை மீறி மெர்குரி படத்தை ஏப்ரல் 13ல் வெளியிடுவேன் என அறிவித்தார் கார்த்திக் சுப்பராஜ்.
மேலும் மெர்க்குரி சைலண்ட் படம் என்பதாலும், படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் டிக் டிக் டிக் படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
“கார்த்திக்… இங்கே எல்லாரும் வியர்வையும் ரத்தத்தையும் கொடுத்துதான் படத்தை உருவாக்கி வருகிறோம்.
எங்கள் படத்திலும் 100க்கும் மேற்பட்டவர்கள் உழைத்துள்ளனர்.
நீங்கள் உங்கள் படத்தை சைலண்ட் (வசனங்கள் இல்லாத) படம் என்பதால் வெளியிடுவேன் என்கிறீர்கள்.
நாங்கள் எங்கள் படத்தில் சவுண்டை நிறுத்திவிட்டு சப்டைட்டில் போட்டு படத்தை வௌளியிடட்டுமா.?
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கலாமா?
நாங்கள் எங்கள் படத்தின் ரிலீஸை இதுவரை 3 முறைக்கு மேல் தள்ளி வைத்துவிட்டோம். எங்கள் படமும் பணத்தால் தான் உருவாக்கப்பட்டது. காற்று மற்றும் தண்ணீரால் படத்தை உருவாக்கவில்லை” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
இவரின் ட்வீட்டை அடுத்து தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடியும் வரை மெர்குரி படத்தை வெளியிட மாட்டேன் என அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
ஆனால் சைலண்ட் படம் என்ற போர்வையில் மற்ற மாநிலங்களில் இப்படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shall i mute sound and release Tik Tik Tik movie asks Producer to Karthik Subbaraj