தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாட்டுப்புறப் பாடல்களை பாடி பிரபலமானவர் அந்தோணி தாசன்.
கோயில் திருவிழாக்களிலும் கிராமிய நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடி அசத்திய இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன.
இதனை தொடர்ந்து திரையுலகில் பின்னணி பாடகர் ஆக நிறைய பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஓரிரு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
இவர் தற்போது ஒரு பாடல்கள் வெளியிடும் இசை நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
இதற்கான விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா இயக்குனர் சீனுராமசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சீனு ராமசாமி மேடையில் பேசும்போது..
“நான் இயக்கிய ‘தர்மதுரை’ படத்தில் ஒரு காட்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் நடித்திருப்பார்கள். அவர்கள் அடிக்கும் ஒரு இசைக்கு தப்பாட்டம் அல்ல இதுதான் சரியான ஆட்டம் என்ற வசனத்தை வைத்திருப்பேன். நாட்டுப்புற கலைஞர்களை கௌரவப்படுத்தவே அந்த வசனம் எழுதப்பட்டது.
அந்தோணி தாசன் ஒரு பாடகர் மட்டுமல்ல. ஒரு அற்புதமான நடிகர் ஒளிந்து இருக்கிறார். அவரது நடிப்பை கண்டு நான் வியந்திருக்கிறேன்.
தற்போது இடி முழக்கம் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். விரைவில் அவரை நாயகனாக வைத்து நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன்.அது பெரிய படமாக இருக்கும்” என மேடையில் தெரிவித்தார் சீனு ராமசாமி.
Seenu Ramasamy speech at Anthony Daasans Folk Marley Records Launch