இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம்..? ட்விட்டரில் ட்விஸ்ட்…

இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம்..? ட்விட்டரில் ட்விஸ்ட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seenu ramasmyவிஜய்சேதுபதி நாயகனாக அறிமுகமான ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி.

இவர் அந்த படத்திற்க தேசிய விருதும் பெற்றார்.

இதனையடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

’நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ’கண்ணே கலைமானே’, ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியனார்.

தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ’மாமனிதன்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த நிலையில் சீனு ராமசாமியின் ட்விட்டர் பக்கத்தில்… அவருக்கு திருமணம் நடந்து விட்டதாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்’ என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Director Seenu Ramasamy clears the rumours about his marriage

மீண்டும் அப்பாவாகும் கார்த்தி.; உமையாளுக்கு தம்பி பாப்பா? தங்கச்சி பாப்பா?

மீண்டும் அப்பாவாகும் கார்த்தி.; உமையாளுக்கு தம்பி பாப்பா? தங்கச்சி பாப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi family picசிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியவர் கார்த்தி.

பருத்திவீரன் படத்தை தொடந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவருகிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரை பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டார் கார்த்தி.

ரஞ்சனி கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு மகள் பிறந்தாள். மகளுக்கு அழகான தமிழில் உமையாள் என பெயர் வைத்தனர்.

தற்போது 6 ஆண்டுகள் கழித்து கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

எனவே விரைவில் மீண்டும் அப்பாவாக உள்ளார் கார்த்தி.

உமையாளுக்கு தம்பி பாப்பா? தங்கச்சி பாப்பா? என காத்திருந்து பார்ப்போம்.

Karthi and Ranjani couple to welcome second child soon

‘தளபதி-65’ அப்டேட்.: டபுள் ஹீரோயினுடன் மிரட்ட போகும் டபுள் விஜய்

‘தளபதி-65’ அப்டேட்.: டபுள் ஹீரோயினுடன் மிரட்ட போகும் டபுள் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 65 vijay dual roleதுப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை தொடர்ந்து விஜய் அண்ட் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் ‘தளபதி 65’ படத்திற்காக இணையவுள்ளது.

இதில் கத்தி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் விஜய்.

தற்போது மீண்டும் அதே போல தளபதி 65 படத்தில் 2 வேடங்களில் நடிக்க இருக்கிறாராம் தளபதி.

ஒரு கேரக்டரில் ஹீரோவாகவும் மற்றொறு கேரக்டரில் மிரட்டல் வில்லனாகவும் நடிக்கிறாராம் விஜய்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இதில் நாயகிகளாக நடிக்க தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் 2021 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த தளபதி 65 படம் 2021 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Vijay to play a double role in Thalapathy 65

ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மகன் இயக்கத்தில் நயன்தாரா

ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மகன் இயக்கத்தில் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

அதில் அவருக்கு ஏதோ கெஸ்ட் ரோல் வேடமே கொடுக்கப்பட்டது. (ரஜினி படத்தில் அது கிடைப்பதே பெரிய விஷயம்தான்)

தற்போது ஆர்ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இந்த திரைப்படம் OTT தளத்தில் தீபாவளி சமயத்தில் வெளியாகவுள்ளது.

இத்துடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ரஜினியின் ’அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் அவர்களின் மகன் நவகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் நயன்தாரா.

பழம்பெரும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ராம்போ ராஜ்குமார். அவரிடம் அசிஸ்டெண்ட் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றிய கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா, பீட்டர் ஹெயின், உள்ளிட்டவர்கள் தற்போது முன்னணி ஸ்டார்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara to act in Rambo Rajkumar’s son Navakanth’s direction?

மெர்சலான வலிமை..; தல அஜித்துடன் இணையும் குட்டி தளபதி

மெர்சலான வலிமை..; தல அஜித்துடன் இணையும் குட்டி தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshath mersalவிஜய் 3 வேடங்களில் நடித்து அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தில் நித்யா மேனன், வடிவேலு, எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.

இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜய்யின் மகனாக குட்டி தளபதியாக அக்சத் தாஸ் என்ற குட்டி பையன் நடித்திருப்பார்.

இந்த பையன் அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியில் விரைவில் அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அது அஜித்தின் வலிமை படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Mersal child actor Akshath to play role in Ajiths Valimai

ஆன்மிக அரசியலும் சரி.. ‘அண்ணாத்த’ ஆட்டமும் சரி.. இப்போ இல்லையாம்..

ஆன்மிக அரசியலும் சரி.. ‘அண்ணாத்த’ ஆட்டமும் சரி.. இப்போ இல்லையாம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth annaatthe shootingரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த.

இந்த படத்தை இந்தாண்டு 2020 தீபாவளிக்கு வெளியிடவிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் கடந்த மார்ச் மாதமே நிறுத்தப்பட்டது.

இதனால் இன்னும் இப்பட சூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை. அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என கூறப்பட்டது.

ரஜினியும் சாலை மார்க்கமாக ஹைதராபாத் சென்று சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என தகவல்கள் வந்தன.

ஆனால் சினிமா சூட்டிங் ஆரம்பமானால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்றும் எஸ்பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் ரஜினிக்கு அவரின் நலம் விரும்பிகள் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்று அச்சம் முற்றிலும் ஓய்ந்தபின்னே தான் சூட்டிங் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துவிட்டராம் ரஜினி.

எனவே அண்ணாத்த சூட்டிங்கை தற்சமயம் ஒத்தி வைக்கிறார்களாம்.

வருகிற டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கி 2021 ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதனிடையில் தன் தன் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு மாநாடு நடத்தி வெளியிடவிருந்தாராம் ரஜினிகாந்த்.

அதற்கும் சூழ்நிலை ஒத்து வரவில்லையாம்.

கொரோனா பிரச்சினை முற்றிலும் அகன்றால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். எனவே அதுவரை காத்திருக்க முடிவு செய்துவிட்டாராம் ரஜினி.

2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2021 பிப்ரவரியில் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதுவரை கட்சிக்கான அனைத்து பணிகளை முடுக்கிவிட்டு போர்க்களத்துக்கு தயராகவிருக்கிறாராம் தலைவர் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth to take longer time in resuming ‘Annaatthe’ shoot

More Articles
Follows