புதிய நாடாளுமன்ற செங்கோல்.: சங்கீ என கலாய்த்தவர்களுக்கு சீனு ராமசாமி பதிலடி

புதிய நாடாளுமன்ற செங்கோல்.: சங்கீ என கலாய்த்தவர்களுக்கு சீனு ராமசாமி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் பிரதமர்.

இதில் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் மோடி நிறுவினார்.

இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி கடந்த 28ஆம் தேதி, “தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்” என பதிவிட்டு இருந்தார்.

இதனால் சீனு ராமசாமியை சில நெட்டிசன்கள் சங்கி எனவும் மோடி ஆதரவாளர் எனவும் கமெண்ட்களால் கலாய்த்து வந்தனர்.

எனவே மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி. அந்த பதிவில்…

நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, டர்பன்னும் அல்ல, நீலவான் அல்ல. மேலும் தமிழ் தேசியம், திராவிடம், இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன். ‘எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்’ என எழுதி வள்ளுவத்துக்கு விளக்கவுரை தந்து வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன். ”

என பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

netizens abuse seenu ramasamy for praising modi

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் உலக நாயகன்.; இதுவரை கமல் வாங்காத சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் உலக நாயகன்.; இதுவரை கமல் வாங்காத சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமாவே போற்றும் ஓர் உன்னத கலைஞர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சினிமாவில் ஏற்காத வேடமில்லை.. பார்க்காத தொழிலில்லை என்றே கூறலாம்.

எந்த வேடத்தையும் அர்ப்பணிப்புடன் செய்பவர் கமல்ஹாசன். 230+க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து வந்த கமல் தற்போது வேறு ஒரு நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரபாஸ், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’.

இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க அஸ்வின் தத் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்படாத பட்ஜெட் இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு 12.01.2024 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 3 வாரங்கள் கமல் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக கமலின் சம்பளம் மட்டும் 150 கோடி எனக் கூறப்படுகிறது.

Kamal Haasan plays baddie in super star film

நிறைய அடி வாங்கி இருக்கேன்.; நானே என்னை பாராட்டி கொண்டேன் – ‘டக்கர்’ சித்தார்த்

நிறைய அடி வாங்கி இருக்கேன்.; நானே என்னை பாராட்டி கொண்டேன் – ‘டக்கர்’ சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரித்த திரைப்படம் ‘டக்கர்’.

கார்த்திக் ஜி கிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த், திவ்யா ஷான், யோகி பாபு, அபிமன்யு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மே 30ஆம் தேதி செய்தியாளர்களை படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் சந்தித்தனர்.

டக்கர்

அப்போது நடிகர் சித்தார்த்த பேசும் போது…

“கொரோனா காலகட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

பெரும்பாலும் என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் ஐந்து ஃபைட் இருக்கு என்பார்கள். ஆனால் ஷூட்டிங் செல்ல செல்ல இரண்டு பைட் மூன்று பாடல் மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் கதை சொல்லும் போது ஐந்து ஃபைட் நிச்சயம் இடம்பெறும். இது முழுக்க ஆக்ஷன் திரைப்படம் என்றார்.

ஒரு கோபக்கார இளைஞனின் கதைதான் இந்த படம். ஒரு இளைஞனுக்கு எதற்கு கோபம் வர வேண்டும்? அவன் பணக்காரன் ஆக வேண்டும் என நினைப்பான். ஆனால் ஆக முடியவில்லை. இதனால் அவன் கோபம் அதிகரிக்கிறது.

இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள திவ்யா இந்த படத்திற்கு பிறகு பெரும் பெயரை பெறுவார். அவர் டக்கர் டீசரில் பேசிய வசனம் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டக்கர்

யோகி பாபு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த படத்தில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்படும். தற்போது சினிமாவை தவிர பலவிதமான பொழுதுபோக்குகள் மக்களுக்கு உள்ளன.

அதன் இடையில் இந்த படத்தின் பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது.

திரையரங்குகளில் ஜூன் 9ஆம் தேதி டக்கர் படம் ரிலீஸ் ஆகிறது. டக்கர் என்றால் சூப்பர். டாப் டக்கர் என்றால் ரொம்ப சூப்பர் என்பார்கள். இந்தப் படத்தில் டக்கர் என்பது மோதலை குறிக்கும் சொல்லாகும்.

இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய அடி வாங்கி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னுடைய காட்சிகளை பார்க்கும்போது நானே என்னை பாராட்டி கொண்டேன். எனக்கே வியப்பாக இருந்தது”

இவ்வாறு பேசினார் நடிகர் சித்தார்த்.

டக்கர்

I appreciates myself says Siddharth at Takkar Trailer Launch

இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.; ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டிரைலருக்கு ரஜினி பாராட்டு

இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.; ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டிரைலருக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள “காவி ஆவி நடுவுல தேவி” படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்” என்று பாராட்டு தெரிவித்து வெளியிட்டார்.

ரஜினிகாந்த் அருகில் வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி எடிட்டர் மார்ட்டின் ஆகியோர் உள்ளனர்.

rajinikanth released ‘kaavi aavi naduvula devi’ movie trailer

மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘2018’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ‘2018’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் “2018”.

இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

“2018” படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

“2018” படம் வெளியாகி 10 நாட்களில் 13 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனையை மலையாள திரை உலகில் நிகழ்த்தியது.

இந்த படமானது 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

‘2018’ படத்தை தற்போது தமிழில் டப் செய்து கடந்த மே 26ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியிட்டனர்.

இந்நிலையில், “2018” படம் வரும் ஜூன் 7ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘2018’ படம் இதுவரை 150 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் மூலம் மலையாள சினிமாவின் முதல் ரூ.150 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை ‘2018’ படத்திற்கு கிடைத்துள்ளது.

Malayalam hit movie 2018 gets OTT release date from june 7

என்னை காதலித்தால் சமாதி ஆகி விடுவீர்கள்… சல்மான்கானின் அதிர்ச்சி பேட்டி

என்னை காதலித்தால் சமாதி ஆகி விடுவீர்கள்… சல்மான்கானின் அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான்.

இவர்க்கு 57 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் சல்மான்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர், சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஸ்லானி, கத்ரினா கைப், சோமி அலி என்று பல நடிகைகளுடன் அவர் காதலில் இருந்து பிறகு முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IIFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழாவில் சல்மான்கானிடம் ஒரு பெண் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.

நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான், “எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்றார்.

சமீபத்தில் சல்மான்கான் அளித்த பேட்டியொன்றில், “என் முன்னாள் காதலிகள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. தவறு என்னுடையதுதான். என்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம். எனது காதல் கதைகள் என்னோடு சமாதி ஆகி விடும்” என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், நடிகர் சல்மானின் இத்தகைய பேச்சால் ரசிகர்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman professes love for salman khan asks him to marry her

More Articles
Follows