தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் பிரதமர்.
இதில் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் மோடி நிறுவினார்.
இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி கடந்த 28ஆம் தேதி, “தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்” என பதிவிட்டு இருந்தார்.
இதனால் சீனு ராமசாமியை சில நெட்டிசன்கள் சங்கி எனவும் மோடி ஆதரவாளர் எனவும் கமெண்ட்களால் கலாய்த்து வந்தனர்.
எனவே மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி. அந்த பதிவில்…
நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, டர்பன்னும் அல்ல, நீலவான் அல்ல. மேலும் தமிழ் தேசியம், திராவிடம், இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன். ‘எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்’ என எழுதி வள்ளுவத்துக்கு விளக்கவுரை தந்து வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன். ”
என பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.
netizens abuse seenu ramasamy for praising modi