அரவிந்த் சாமி & த்ரிஷா இணைந்த ‘சதுரங்க வேட்டை 2’ பட ரிலீஸ் அப்டேட்.

அரவிந்த் சாமி & த்ரிஷா இணைந்த ‘சதுரங்க வேட்டை 2’ பட ரிலீஸ் அப்டேட்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2.

H.வினோத் (வலிமை, நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டையின் இயக்குனர்) எழுதி, NV நிர்மல் குமார் (விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ புகழ்) இயக்கிய இந்தப் படத்தை, தயாரிப்பாளர் மனோபாலாவின் Picture House and Cinema city நிறுவனம் தயாரித்துள்ளது.

ONSKY Technology PVT. LTD நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் இது குறித்து கூறியதாவது…

“அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன்.

சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று.

இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.

இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, ​​உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன்.

இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி.

இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பிரபலமான பழமொழி உள்ளது – சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில்இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா உடன், பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் மற்றும் பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள் சதுரங்க வேட்டை 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Sathuranga Vettai 2 release date is here

ஹாட்ரிக் ஹிட்டடிக்க மோதலுக்கு ரெடியான சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி

ஹாட்ரிக் ஹிட்டடிக்க மோதலுக்கு ரெடியான சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் டான்.

இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது-

இதே நாளில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர்.

ஏற்கெனவே 2013 ஆண்டில் எதிர்நீச்சல் மற்றும் சூதுகவ்வும் படங்கள் மோதின.

அதன்பின்னர் 2016 ஆண்டில் ரெமோ, றெக்கை ஆகிய படங்கள் மோதின.

இந்த நான்கு படங்களும் ஹிட்டானது.

தற்போது 3வது முறையாக விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் ஹாட்ரிக் ஹிட்ட்டிக்க மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Vijay Sethupathi to clash next year

விஜயகாந்த்-பிரபு படங்களை இயக்கியவர் ஏவிஎம் எதிரே அனாதையாக இறந்து கிடந்தார்

விஜயகாந்த்-பிரபு படங்களை இயக்கியவர் ஏவிஎம் எதிரே அனாதையாக இறந்து கிடந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் 150வது படமான விஜயகாந்த் நடித்த ‛மாநகர காவல்’ படத்தை இயக்கியவர் எம்.தியாகராஜன்.

இவர் இளையதிலகம் பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் சினிமா வாய்ப்பின்றி சென்னை மாநகர தெருக்களில் அநாதையாக அலைந்து திரிந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 8ஆம் தேதி அதிகாலை சென்னையில் ஏ.விஎம்.எம். ஸ்டுடியோ எதிரில் உள்ள தெருவில் அனாதையாக இறந்து கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார், கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாநகர காவல் என்ற பெயரில் படம் எடுத்த இயக்குனரின் நிலையறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் செய்வதறியாது உள்ளனர்.

இவரது மறைவுக்கு விஜயகாந்த், அவர் குடும்பத்தினர் சார்பில், மறைந்த எம்.தியாகராஜன் தம்பியும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை அருப்புகோட்டையில் நடக்கும் எம்.தியாகராஜன் இறுதி சடங்கில் தேமுதிக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director M Thyagarajan passed away

ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..

ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய Sudesi App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும்.

Sudesi App-ஐ அறிமுகம் செய்வதற்காக சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு Sudesi App பற்றி பேசினார்கள். Sudesi App- ன் CEO கோபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் ஒன்றினைந்து Sudesi App-ஐ அறிமுகம் செய்தனர். திருச்சியில் 800 ஓட்டுநர்கள் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் இயங்கி கொண்டிருக்கும் Sudesi App சென்னையில் 10.12.2021 முதல் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் அடுத்த 5 நாட்களில் முதல் சேவையை தொடங்க இருக்கிறது.

கால் டாக்சி மற்றும் வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபெர் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுபோன்ற செயலிகள் வெளியானது முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக Sudesi App-ஐ உருவாக்கும் முன், சுதந்திரம் என்ற பெயரில் டெலிகிராம் அக்கவுண்ட் மற்றும் இலவச தொலைபேசி எண் மூலமாக இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான கட்டணத்தில் சேவை வழங்க துவங்கினர். பின் சுதந்திர மீட்டர் ஆட்டோ என்ற பெயரை மாற்றி சுதேசி என்ற பெயரில் செயலியை உருவாக்கி் ஆட்டோ மற்றும் டாக்சி இரண்டு சேவையும் தருகின்றனர்.

Sudesi App, A specified app for Auto ride from the auto drivers Launched in chennai

அஸ்வினை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..; டிவி சீரியல் நடிகரும் கண்டிப்பு

அஸ்வினை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..; டிவி சீரியல் நடிகரும் கண்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு பல பிரபல நட்சத்திரங்களை தந்த டிவி விஜய் டிவி என்று சொன்னால் அது மிகையல்ல.

அண்மையில் குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் அஸ்வின், புகழ், சிவாங்கி உள்ளிட்ட பிரபலங்களையும் தற்போது சினிமாவுக்கு தந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினுக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

எனவே தான் இவர் தன் சமூக வலைத்தளப்பக்கங்களில் அடிக்கடி PEOPLES LOVE என்பார்.

சில டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். அண்மையில் வெளியான

‘ஓ மணப் பெண்ணே’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவர் முதன் முறையாக நாயகனாக நடித்துள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

இந்த விழாவில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும்போதே அஸ்வின் தூங்கி விட்டதாகவும் அவர் பேசினார்.

நான் நடிச்ச படம் நல்லா வரேலன்னா நானே அந்த படத்தை வெளியிட முடியாத அளவுக்கு நானே ஏதாச்சும் செய்வேன்” எனவும் பேசினார்.

மேலும் இப்பட இயக்குனர் பேசும்போது… நான் ஒரு புதுமுக நடிகரை இயக்குவது போல இல்லை. ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவது போல உணர்ந்தேன்” என ஹீரோவுக்கு ஐஸ் வைத்த மாதிரி பேசினார்.

இதனால் அஸ்வினை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் நடிகரும் ‘திட்டம் இரண்டு’ பட இயக்குருமான விக்னேஷ் கார்த்திக் என்பவரும் அஸ்வினின் பேச்சை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘ஒரு ஹீரோ தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை கேட்டேன். நான் இயக்குனர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன் படம் நல்லா வரலன்னா நான் எப்படியாவது ரிலீஸ் பண்ண விடமாட்டேன்னு பேசியுள்ளார்.

இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ளயா ? அப்போ

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடைய அவல நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக மாறி விட்டால் என்ன நடக்கும்.

இவர் கதை கேட்கும்போது லைட்டா கண் சிமிட்டினாள் கூட ஒருவேளை சார் தூங்குறாருன்னுல்ல தோணும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Ashwin speech at Enna Solla Pogirai audio launch creates controversy

ஜீவி திரைக்கதையாசிரியர் இயக்கத்தில் உளவியல் ஃபேண்டஸி படம் ‘க்’

ஜீவி திரைக்கதையாசிரியர் இயக்கத்தில் உளவியல் ஃபேண்டஸி படம் ‘க்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபு தமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”.

தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.

ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்த, இயக்குநர் பாபுதமிழ் “க்” படத்தில் மீண்டும் ஒரு புது வகை ஜானரில் ரசிகர்களை அசத்தியுள்ளார்.

ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், YG மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மனதை மயக்கும் இசையை தந்துள்ளார். பியார் பிரேமா காதல் பட புகழ் எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ‘

ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்து செல்லும் விதமாக, “க்” திரைப்படம் 2021 டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Jiivi screen play writer’s next is titled Ikk

More Articles
Follows