தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்த நடிகைக்கும் கிடைக்காத புகழை சம்பாதித்தவர் நடிகை குஷ்பூ. இவருக்கு ஒரு காலத்தில் தமிழகத்தில் கோயில் கட்டிய ரசிகர்களும் உண்டு.
தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் குஷ்பூ. திமுக காங்கிரஸ் பாஜக என ஒவ்வொரு கட்சியிலும் சில ஆண்டுகள் பயணித்து வருகிறார் குஷ்பூ.
தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார் குஷ்பூ.
நடிகை திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார் குஷ்பூ.
இதனிடையில் சில தினங்களுக்கு முன் தலித் மக்கள் குறித்து குஷ்பு பேசிய பேச்சு சர்ச்சையானது.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.
தலித் மக்கள் பேசும் மொழியை வன்மன் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுபடுத்தி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்…
சில தினங்களுக்கு முன் மணிப்பபூர் விவகாரம் குறித்து குஷ்பு பதில் அளிக்கும் போது.. உங்களை போல சேரி மொழி பேசி எனக்கு பதில் அளிக்க தெரியாது என பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினும் கூறிவந்த நிலையில் திடீரென சேரி என்பதற்கு புதிய விளக்கம் கொடுத்திருந்தார் குஷ்பூ.
அதில்.. சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம். நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக கிண்டலாக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன். நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்பேன்” என பதிவிட்டு இருந்தார்.
VCK Party complaint against Khushbu on recent controversy speech