தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் நடிகர்கள் படம் தயாரிப்பது ஒன்றும் புதிதல்ல.
ஒரு சிலர் அவர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பார்கள். மற்ற சிலர் மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பார்கள்.
இதில் சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோர்கள் தாங்கள் நடிக்காத படமென்றாலும் தரமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லோ பட்ஜெட்டில் நல்ல படங்களை கொடுக்கின்றனர்.
36 வயதினிலே, பசங்க2, மகளிர் மட்டும், கடுகு (ரிலீஸ் மட்டும்) ஆகிய படங்களை சூர்யா தயாரித்திருந்தார்.
அதுபோல் காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு ஆகிய நல்ல படக்களை தயாரித்திருந்தார் தனுஷ்.
இவர்களைத் தொடர்ந்து ஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்திருந்தார் விஜய்சேதுபதி.
இந்நிலையில் புதிய திறமையான கலைஞர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தவும், தரமான படங்களை கொடுக்கவும் முடிவு செய்த சிவகார்த்திகேயன் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவிருக்கிறாராம்.
இதன் மூலம் குறைந்த செலவில் புதிய படங்களை கொடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Sivakarthikeyan plans to produce low budget movies to support Talented Youngsters