400+ திரையரங்குகளில் ஆடவரும் ‘ருத்ரன்’ லாரன்ஸ்.; ரிலீஸ் கன்ஃபார்ம்

400+ திரையரங்குகளில் ஆடவரும் ‘ருத்ரன்’ லாரன்ஸ்.; ரிலீஸ் கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படம் தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு ஏப்ரல் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘ருத்ரன்’ தயாரிப்பாளர்கள் டப்பிங் உரிமை ஒப்பந்தத்தை 4 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் முடித்துவிட்டு, பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டதா இல்லையா என்பது ரசிகர்கள் மத்தியில் புதிராக உள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ருத்ரன் படம் வெளியிடுவதற்கு தடை கோரி திருசஞ்சய் லால்வாணி நிறுவனத்தார் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 13 பட தயாரிப்பாளர் கதிரேசன் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி சஞ்சய் நல்வாணி நிறுவனத்தினர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனைஅடுத்து திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டது கோர்ட்.

மேலும், ‘ருத்ரன்’ படத்தை தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘Rudhran’ to release on 400+ screens in Tamil Nadu

ஷாரூக் கான் – நயன்தாரா படகில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ லீக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஷாரூக் கான் – நயன்தாரா படகில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ லீக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

படத்தின் ஒரு பாடலில் முக்கியமான காதல் தருணத்தின் வீடியோ கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

SRK வெள்ளை நிறத்தில் இருந்தபோது நயன் சிவப்பு நிற உடையில் வசீகரமாக காணப்பட்டார்.

மும்பை கடற்கரையில் நடுக்கடலில் உள்ள சொகுசு படகில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

அட்லீ மற்றும் அவரது படக்குழு உறுப்பினர்கள் எப்படி, யார் சட்டவிரோதமாக வீடியோவைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தார்கள் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Shah Rukh Khan and Nayanthara romance on luxury boat, video leaked

THE EAGLE IS COMING ! லியோ படத்தில் நடிக்க இருக்கும் கமல் ஹாசன்

THE EAGLE IS COMING ! லியோ படத்தில் நடிக்க இருக்கும் கமல் ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லியோ படத்தின் கலை இயக்குனர் சதீஸ் குமாரின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவு வைரலாகி வருகிறது.

கமல் விரைவில் தனது ‘விக்ரம்’ அவதாரத்தில் லியோ படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

சதீஸ்குமார் ஒரு தங்க கழுகின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் “தி ஈகிள் இஸ் கம்மின்” என்று எழுதியுள்ளார்.

இது ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்காக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த தீம் பாடலாகும்.

LCU ரசிகர்கள் “code word” ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

The eagle ‘Vikram’ entering the ‘Leo’?

வெற்றியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..; ஜி.பி. முத்துக்கு ‘பம்பர்’ கிடைக்குமா?

வெற்றியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்..; ஜி.பி. முத்துக்கு ‘பம்பர்’ கிடைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜீவி’ படத்தின் நடிகர் வெற்றி அடுத்ததாக பிக் பாஸ் சீசன்4 புகழ் நடிகை ஷிவானி நாராயணனுடன் இணைந்து நடித்துள்ள படம் ‘பம்பர்’.

இப்படத்தை இயக்குனர் முத்தையாவின் முன்னாள் உதவியாளரான எம் செல்வகுமார் இயக்குகிறார்.

இப்படத்தில் ஹரீஸ் பெரேடி, கவிதா பாரதி, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், ‘பம்பர்’ படத்திற்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும், ‘பம்பர்’ படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பம்பர்

Vetri & Shivani’s ‘Bumper’ censored

நடிகர் சந்தானம் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி.; உருக்கமான பதிவு

நடிகர் சந்தானம் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி.; உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமானவர் நடிகை விஷாகா சிங்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

விஷாகா சிங் மருத்துவமனையில் இருந்து தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக விஷாகா சிங் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியதாகவும், குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகை விஷாகா சிங் கூறியது, “இல்லை, என்னால் ஒருபோதும் கீழே இருக்க முடியாது மற்றும் நீண்ட நேரம் வெளியேயும் இருக்க முடியாது. இலையுதிர், குளிர்காலம், வசந்த காலத்தில் அடிக்கடி ஏற்படும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மகிழ்ச்சியான ஆரோக்கியத்தை நோக்கித் திரும்பினேன். கோடைகாலம்.ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே உணர்கிறது/ ஒருவேளை இது புதிய நிதியாண்டாக இருக்கலாம், அல்லது இது எனது பிறந்தநாள் மாதத்தின் முன்னோட்டமாக இருக்கலாம்.வெயில் நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடனும் ஆரோக்கியத்தின் மீது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடனும் முன்னோக்கி நகர்கிறேன். மகிழ்வான தருணங்கள் அமையட்டும்.” என கூறினார்.

Actress Vishaka Singh gets hospitalised

JUST IN சினிமா டிக்கெட் விலையில் திருத்தம்.; 8AM – NIGHT 2AM வரை காட்சிகளுக்கு அனுமதி

JUST IN சினிமா டிக்கெட் விலையில் திருத்தம்.; 8AM – NIGHT 2AM வரை காட்சிகளுக்கு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது.

தமிழக மக்களின் வாழ்வியலோடும் அரசியலோடும் தமிழ் சினிமா எப்போதுமே கலந்து ஒன்றோடு ஒன்றாக பயணித்து வருகிறது.

பல அரசியல் கட்சித் தலைவர்களையும் தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. மேலும் தமிழகத்தை ஆண்ட எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறைக்கு தங்களது பெரும் பங்களிப்பையும் செய்துள்ளனர்.

மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் முதல் இன்று வளர்ந்து வரும் நடிகர்கள் ஒரு வசனத்தை பேசினால் அதை அரசியலோடு கலந்தே மக்கள் ரசித்து வருகின்றனர்.

எனவே தங்களின் அன்றாட வாழ்வோடு சினிமாவுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுப்பதில் தமிழர்களுக்கு நிகர் இல்லை.

மக்களின் ஆர்வத்தால் நிறைய திரைப்படங்களும் திரை கலைஞர்களும் உருவாகி வருகின்றனர்.

திரையரங்கில் சினிமா டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் தரமான படங்களை ஆதரித்து வருகின்றனர்..

மேலும் முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ 1000, 2000 வரை செலவு செய்து படங்களை பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்க அனுமதி கட்டணத்தில் திருத்தம் வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Revision in cinema ticket prices.; 8AM and 2AM night show allowed

More Articles
Follows