தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ருத்ரன்’.
இந்த படத்தின் மூலம் ‘பொல்லாதவன்’ & ‘ஆடுகளம்’ படங்களின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘ருத்ரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.
(இந்த இசை விழாவின் ஒளிபரப்பு உரிமையை பிரபல டிவி சேனல் பெற்றுள்ளதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.)
இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவி வரும் விஜய் டிவி KPY பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.
கூடுதல் தகவல்…
நடந்த இயக்குனர் நடிகர் இயக்குனர் ஆகியவற்றை தாண்டி மனிதநேயமிக்கவர் ராகவா லாரன்ஸ். இவர் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஊனமுற்ற குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
மேலும் பல ஏழை மாணவர்களின் படிப்புக்கும் உதவி வருகிறார். இவை இல்லாமல் தீவிர நோயால் அவதிப்படும் ஏழை மக்களின் சிகிச்சைக்கும் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Raghava Lawrence donated Rs 10 lakhs to KPY Bala