தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி யார் என்றால் அது பிரியா பவானி சங்கர் தான்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிளட் மணி, ஓ மணப்பெண்ணே இரண்டும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
தற்போது குருதி ஆட்டம், யானை, பொம்மை, ருத்ரன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.
இவர் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் காதலனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில்… ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாய். ஆனால் இப்போ நல்ல மனிதராக மாறி விட்டாய். நான் அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, அன்பு, நட்பு, அமைதி,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.
இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது. அதனால் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளேன்” என காதலனை கலாய்த்து பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
Actress Priya Bhavani Shankar wishes to her boy friend