லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ பட ரிலீசுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ பட ரிலீசுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது.

ரூ. 12 கோடியே 25 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது.

இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இத்துடன் விசாரணையை ஏப்ரல் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.

Court orders ban on release of ‘Rudhran’ starring Lawrence

தமிழ் புத்தாண்டில் யோகி பாபு வரலையாம்.; காரணமே இல்லாம ‘யானை முகத்தான்’ தள்ளிப்போனார்

தமிழ் புத்தாண்டில் யோகி பாபு வரலையாம்.; காரணமே இல்லாம ‘யானை முகத்தான்’ தள்ளிப்போனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.

இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இதில் விநாயகர் வேடத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி.

சமூக பக்தி பாணியில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ரஜீஷ் மிதிலா மற்றும் லிஜோ ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் இந்த படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் தற்போது இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் முதன்முறையாக படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என அறிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

“காரணம் இல்லாமல் தள்ளி வைக்கிறோம்.. #யானைமுகத்தான் படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு..!!”

#YaanaiMugathaan worldwide release postponed from April 14 to April 21 now.
Due to ‘*NO*’ Reason..

@iYogiBabu @thilak_ramesh
@RMidhila #Karunakaran
@sonymusic_south @johnsoncinepro

Yaanai Mugathaan worldwide release postponed from April 14 to April 21

மலையாளத்திலும் பட்டைய கிளப்ப போகும் யோகி பாபு.; முழுதகவல் இதோ..

மலையாளத்திலும் பட்டைய கிளப்ப போகும் யோகி பாபு.; முழுதகவல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பல பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

யோகி பாபு இப்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டிலும் நடிக்கிறார்.

இந்நிலையில், யோகி பாபு தற்போது ‘குருவாயூரம்பல நடையில்’ என்னும் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இப்படத்தை இயக்குகிறார்.

மேலும், இப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பாசில் ஜோசப் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், யோகி பாபுவின் ‘யானை முகத்தான்’ திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu joins the cast of Guruvayoor Ambalanadayil

சூர்யா 42.: அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கொடுத்த சிவா

சூர்யா 42.: அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கொடுத்த சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 42’. (தற்காலிக பெயர்)

சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் சூர்யா தோன்றுகிறார்.

3டியில் உருவாகி பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது.

தற்போது ப்ரீ பிசினஸிலும் இந்தப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. டிஜிட்டல் உரிமை, சேட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவை பெரிய தொகைக்கு பட பிசினஸ் நடந்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பான புதிய போஸ்டரும் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்கள் இந்த அறிவிப்பால் உற்சாகமாகி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சூர்யா 42

suriya 42 film title release date announcement by siva

சிறந்த படங்களுக்கு மானியம்.. திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கீடு.; அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

சிறந்த படங்களுக்கு மானியம்.. திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கீடு.; அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன்கருதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக அளித்தோம். அவைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் 2015-முதல் 2022 ஆம் ஆண்டுகளில் சிறு முதலீட்டில் தயாரித்து வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு ரூ 7 லட்சம் மானியம் வழங்கப்படும்.

அதற்கான மானியக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறிய முதல்வர் அவர்கள் மேலும் கூறுகையில் திரைப்பட நகரத்தை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிதாக மாற்றி அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதையும் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உதவிடும் வகையில் தயாரிப்பாளர்களின் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் பெற்றிட வழிகாட்டியுள்ள , நமது பாசத்திற்குரிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ,
மரியாதைக்குரிய இளைஞர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி
ஸ்டாலின் அவர்களுக்கும், அன்பிற்கினிய செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் , ஒட்டுமொத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் இருகரம் குவித்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Producers Association Statement of thanks to Tamil Nadu Govt

22000 அடி உயரத்தில் பறந்த உலகநாயகன் கமல்

22000 அடி உயரத்தில் பறந்த உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தற்போது தென்னாப்பிரிக்காவில் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பு அங்கு படமாக்கப்படுகிறது மற்றும் தீவிர படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், அங்கு அவர் ஒரு பைலட்டுடன் விமானத்தில் பறக்கிறார்.

கமல் அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அதில் “ஒன்றாகப் பறக்கிறது. உயரம் 22,000 அடி!” என்று அதற்குத் தலைப்பிட்டுள்ளார்.

Kamal Haasan flies a plane in South Africa

More Articles
Follows