இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இவர்கள்தான்

இளையராஜாவுடன் முதன்முறையாக இணைந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள்.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசைஞானி இளையராஜா எழுதி இருக்கிறார்.

இந்தப் பாடலுக்கு இணையதளங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதள பார்வையாளர்களையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ”தீயோரை திருத்தாது திருப்பணி ஏற்கின்றாய், கோயில் செல்வம் கொள்ளை போக தடுத்திடாமல் படுத்து கிடப்பது அழகோ..!” என்ற வரிகளில் இசைஞானி, இன்றைய இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடமுள்ள மனக்குமுறலை நேர்த்தியாக பதிவு செய்திருப்பது திரையிசை ரசிகர்களுக்கு வியப்பை அளித்திருக்கிறது.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் இந்தப் பாடல், ‘மாயோன்’ படத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், ரஞ்சனி & காயத்ரி ஆகியோரின் இனிமையான குரலில், பக்தி பாடலாகவும், தமிழகத்திலுள்ள அனைத்து இல்லங்களிலும் தவறாது ஒலிக்கக்கூடும் என திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

இந்த பாடலில் நீண்ட நாட்கள் கழித்து கர்நாடக இசைக் கலைஞர்களின் காந்த குரலில் சங்கதிகளைக் கேட்கும் போது, இசைஞானியின் மெத்த இசையனுபவம் ரசிகர்களின் காதிற்கு தேனிசையாக பாய்கிறது என்றால் அது மிகையல்ல.

Ranjini and Gayathri joins for Maayon title track

சிம்புவின் ‘மாநாடு’ வெற்றிக்கு வழக்கா.? டி.ஆர். போட்ட நோட்டீஸ்.. சுரேஷ் காமாட்சி போட்ட ரிப்ளை ட்வீட்

சிம்புவின் ‘மாநாடு’ வெற்றிக்கு வழக்கா.? டி.ஆர். போட்ட நோட்டீஸ்.. சுரேஷ் காமாட்சி போட்ட ரிப்ளை ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஏதாவது ஒரு பிரச்சினைகளை சந்தித்து வருவது வழக்கமாகிவிட்டது.

அண்மையில் வெளியான ‘மாநாடு’ படமும் தடைகளை தாண்டி நவம்பர் 25 ம் தேதி ரிலீஸ் ஆனது.

அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘மாநாடு’ படக்குழுவும் தங்களுக்குள்ளே சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி வந்தனர்.

படம் வெளியாகி 3வது வாரத்திலும் தமிழகத்தில் 200 தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் சிம்புவின் தந்தையும் பிரபல நடிகருமான டி.ராஜேந்தர் ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த நோட்டீஸில்…

‘மாநாடு’ ரிலீசுக்கு முந்தைய நாள் வரை கடும் பைனான்ஸ் பிரச்சனை இருந்தது.

இதனால் பைனான்சியர் உத்தம் சந்த், விற்கப்படாத ரூ.5 கோடி மதிப்பிலான சேட்டிலைட் உரிமத்திற்கு பொறுப்பேற்பதாகவும், ஒருவேளை சேட்டிலைட் உரிமம் ரூ.5 கோடிக்கும் குறைவான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு தான் பொறுப்பேற்றதாக டி.ராஜேந்தரிடம் கையெழுத்து பெற்றாராம்.

இந்த ஒப்பந்தத்திற்கு டி.ஆர் ஒப்புக் கொண்டு, கையெழுத்திட்டதாலேயே மாநாடு படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டதாம்.

தற்போது மாநாடு படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.

இதனையடுத்து சுரேஷ் காமாட்சியும், உத்தம் சந்த்தும் தனக்கு தெரியாமலேயே சேட்டிலைட் உரிமத்தை மிகப் பெரிய தொகைக்கு வெளியே விற்று விட்டதாக அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோட்டீஸ் தொடர்பாக சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்..

“வெற்றி கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது. கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா” என குறிப்பிட்டுள்ளார்.

T Rajendhar files case regarding satellite rights of Maanaadu

காதலர்களின் குடும்பங்களின் ஆணிவேரை ஆட்டம் காட்ட வரும் ‘ஐஸ்வர்யா முருகன்’

காதலர்களின் குடும்பங்களின் ஆணிவேரை ஆட்டம் காட்ட வரும் ‘ஐஸ்வர்யா முருகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம்.

அவரது இயக்கத்தில் மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’.

காதல், தமிழ் சினிமா ஆதி காலம் முதல் காதலையும் காதலர்களின் வலியையும், பிரிவையும், இன்பத்தையும் பல படங்களில் சொல்லியிருக்கிறது.

ஆனால் ஒரு காதல்.. காதலர்களின் குடும்பங்களின் என்னென்ன துயரங்களை உண்டாக்கும்.

காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளையும்.. கிளைகளையும் தாண்டி வேரோடும்.. ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது.

காதலின் இந்த பக்கத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் “ரிங்கா ரிங்கா ரோசா” பாடல் 2021 டிசம்பர் 15 வெளியாகிறது.

முதல் பாடல் போலவே ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை , ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன், நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .இசை -கணேஷ் ராகவேந்திரா.

ஏற்கெனவே இவர் ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர். எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம் . கலை -முகமது. சண்டைப்பயிற்சி -தினேஷ் .இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர். நடனம் தஸ்தா.
Pro ஜான்சன்.

Renigunta director’s next is titled Aishwarya Murugan

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ப்ளான்.: ஏழை மாணவர்களுக்கு உதவிட ரஜினி முடிவு

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ப்ளான்.: ஏழை மாணவர்களுக்கு உதவிட ரஜினி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் இன்று டிசம்பர் 12 தன் 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனைமுன்னிட்டு ரஜினிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனவே வழக்கம் போல அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் நிறைய தியேட்டர்களில் ரஜினி படங்களை பிரத்யேகமாக திரையிட்டு வருகின்றனர்.

கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து சேனல்களிலும் ரஜினி படங்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது.

இந்த நிலையில், தனது 72ஆவது பிறந்தநாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு சிறந்த காரியத்தை தொடங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏழை குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரஜினிகாந்த பவுண்டேசன் என்ற அமைப்பை ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

இந்தத் திட்டம் வழக்கறிஞர் எம்.சத்ய குமாரால் நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ளார்.

Rajinikanth foundations will train 100 students for TNPSC exams

JUST IN சிம்பு ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி.; கொரோனா ரிசல்ட் என்ன.?

JUST IN சிம்பு ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி.; கொரோனா ரிசல்ட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதையை எழுதியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 10) இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Actor STR aka Simbu admitted in hospital

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள் & ரூ.10 லட்சம் வழங்கிய அல்லு அர்ஜுன்

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள் & ரூ.10 லட்சம் வழங்கிய அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார்.

ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் இந்த செயல், புஷ்பா குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களின் பாராட்டை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பையும் பெற்றுள்ளது.

“புஷ்பா குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அல்லு அர்ஜுன் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, அவர்களுக்கு தங்கம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க விரும்பினார். தனது எண்ணத்தை உடனடியாக அவர் செயல்படுத்தினார்,” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

Allu Arjun gifts gold coins and Rs 10 lakh to PUSHPA team

More Articles
Follows