தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜனவரி 10ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பில் 2 படங்கள் வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.
இதில் ரஜினியின் பேட்ட வசூலை அஜித்தின் விஸ்வாசம் முந்தி விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டது. இதனை சில ரசிகர்கள் மற்றும் ஊடங்கள் நம்பி செய்தியாக வெளியிட்டனர்.
இதனையடுத்து ‘பேட்ட’ தரப்பில் அப்படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அவர்கள் “தமிழ்நாட்டில் 600க்கும் அதிகமான தியேட்டர்கள் ‘பேட்ட’ படத்திற்கு உள்ளது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தர் கேஜேஆர் ஸ்டுடியோஸ், “தமிழ்நாடு மக்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் உண்மை தெரியும். ஏன் நீங்கள் தேவையில்லாத போட்டியையும், சண்டையைம் உருவாக்குகிறீர்கள்.
தமிழ்நாடு பாக்ஸ்ஆபிஸ் வசூல் என்ன என்பதைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்,” என கருத்து தெரிவித்தார்கள்.
இதனால் ஒரு சர்ச்சை உருவானது. இதனிடையில் விஸ்வாசமான சில ட்ராக்கர்கள் விஸ்வாசம் தான் முன்னிலை என வரிந்துக் கொண்டு ட்வீட் போட்டார்கள்.
இதனால் கடுப்பான ‘பேட்ட’ தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தரப்பில், “டிராக்கர்ஸ் என்று அழைக்கப்படுபவர்களே, தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘பேட்ட’ படத்தின் வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கே இன்னும் வராத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக வசூல் விவரங்களைத் தெரிவிக்கிறீர்கள்.
ரசிகர்களே, இரண்டு படங்களுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள். தவறான பரப்புரையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்,” என டுவிட் செய்தனர்.
அதன் பின்னரே சில விஸ்வாசிகள் தங்கள் தவறை உணர்ந்துள்ளனர். ஆனாலும் ஒரு சிலர் தங்கள் தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
Rajinis Petta team slams Ajiths Viswasam paid trackers