‘சந்திரமுகி 2’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ பட டப்பிங் பணிகளை தொடங்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

சில தினங்களுக்கு முன்பு ‘சந்திரமுகி 2’ படம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2

raghava lawrence started the dubbing work of chandramukhi 2

என் தாயை எப்படி தவறாக பேசலாம்.?.; துடிதுடிக்கும் ‘துள்ளுவதோ இளமை’ நாயகி

என் தாயை எப்படி தவறாக பேசலாம்.?.; துடிதுடிக்கும் ‘துள்ளுவதோ இளமை’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் ஜோடியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின் ஷிருங்கார்.

இதை தொடர்ந்து ‘விசில்’, ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘உற்சாகம்’, ‘பூவா தலையா’, ‘நண்பேன்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

இந்த நிலையில், நடிகை ஷெரின் அளித்துள்ள பேட்டியில், “நான் வலைதளத்தில் அவதூறுகளை எதிர்கொண்டேன். நிறைய வெறுப்பாளர்கள் உருவானார்கள். என் பெற்றோரை விமர்சித்தனர். எனது நாயை கூட விட்டு வைக்காமல் சீண்டி பார்த்தனர். என்னை பற்றிய விமர்சனங்களை கடந்து போகலாம்.

ஆனால் எனது பெற்றோருக்கு பிரச்சினை வரும்போது எப்படி பொறுத்து போக முடியும். இதனால் மனம் உடைந்து அழுதேன். என்னை இழிவுபடுத்தி பேசலாம். ஆனால் எனது தாயை எப்படி பேசலாம். தவறானவர்கள்தான் மற்றவர்களை பற்றி தவறாக பேசுவார்கள். சமூக வலைதளங்களால் நன்மை இருக்கிறது. அதே நேரம் மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பது அதன் தீமையாகும்” என்றார்.

sherin a passionate interview about his life

விஜய் & அருண் விஜய் & எமி இணைந்த படத்தின் டப்பிங் அப்டேட்

விஜய் & அருண் விஜய் & எமி இணைந்த படத்தின் டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யானை’ படத்திற்குப் பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்தார்.

இதனை, அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது இல்லையே

arun vijay’s Mission Chapter 1 movie new update

நான் ஆடும்போது தான் ஆட்டக்காரர்களின் வலியை உணர்ந்தேன் – முனீஷ்காந்த்

நான் ஆடும்போது தான் ஆட்டக்காரர்களின் வலியை உணர்ந்தேன் – முனீஷ்காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.

இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது…

“முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள் , முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும், நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.

நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது…

இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம்.

இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி.

நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அப்போதுதான் என்னால் கரகாட்டக்காரர்களின் நிஜமான வலியை உணர முடிந்தது.

அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள்.

Munishkanth about his struggle in Kaadappura Kalaikuzhu

‘காடப்புறா கலைக்குழு’ பட டிரைலரை பார்த்து தனுஷ் பாராட்டினார் – காளி வெங்கட்

‘காடப்புறா கலைக்குழு’ பட டிரைலரை பார்த்து தனுஷ் பாராட்டினார் – காளி வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.

இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…

எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி.

தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார். அவருக்கு வாழ்த்துக்கள்.

ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.

Dhanush praises Kaadappura Kalaikuzhu trailer says Kaali Venkat

‘முண்டாசுப்பட்டி’-க்கு பிறகு ‘காடப்புறா கலைக்குழு’ தான்.. – சூப்பர் குட் சுப்ரமணி

‘முண்டாசுப்பட்டி’-க்கு பிறகு ‘காடப்புறா கலைக்குழு’ தான்.. – சூப்பர் குட் சுப்ரமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.

இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது…

நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம்.

அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.

இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.

நடிகை சுவாதி முத்து பேசியதாவது…

முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம் படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி.

After Mundasuppatti movie Kaadappura Kalaikuzhu says Subramani

More Articles
Follows