தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடித்து வெளியான ‘ஜெய்பீம்’ படம் 1995ல் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இதில் நிஜ கேரக்டராக காண்பிக்கப்பட்ட ராசாக்கண்ணு விவாகாரம் தற்போதைய தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாகியுள்ளது.
ராசாக்கண்ணு மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்குக்கால் அவர் காவல்நிலையத்திலேயே சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நிஜ ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியை சென்னையில் பல பிரபலங்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.
நடிகர் சூர்யா 15 லட்சம் அவரின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான ஆதாரங்களை பார்வதியிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதி ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரிடம் ஒரு தொகையை கொடுத்துள்ளார்.
மேலும் விரைவில் சொந்தமாக வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்து திரும்பியுள்ளார் லாரன்ஸ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்.. “முதலில் இந்த படத்தை எடுத்த சூர்யா, ஜோதிகாவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இப்படத்தை எடுக்க வில்லையென்றால் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது” என தெரிவித்தார் ராகவா லாரனஸ்.
Raghava Lawrence pays surprise visit to Parvathi house