சமந்தாவின் ஐட்டம் சாங்.. தேசிய கீதமா.? ரஜினி-விஜய்-தனுஷ் பட தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு

சமந்தாவின் ஐட்டம் சாங்.. தேசிய கீதமா.? ரஜினி-விஜய்-தனுஷ் பட தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.

இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது.

தமிழ் பதிப்பில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாட விவேகா எழுதியிருக்கிறார்.

இதுவரை இந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை யூடியுப்பில் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு ஆந்திராவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 14ல் சென்னையில் ‘புஷ்பா’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார் பங்கேற்கவில்லை.

இந்த பாடல் குறித்து அல்லு அர்ஜூன் பேசுகையில்… அது உண்மை தான் என்றார். (அதாவது ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து)

அதற்கு முன்பு ‘புஷ்பா’ படக்குழுவினரை பாராட்டி பேச வந்திருந்தார் பிரபல தயாரிப்பாளர் தாணு.

அவர் பேசுகையில்… சாமி.. சாமி… பாடல் நன்றாக வந்துள்ளது.

அதுபோல் ஓ… சொல்றியா மாமா.. பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியுள்ளது.

இந்த பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த துப்பாக்கி, தனுஷ் நடித்த அசுரன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Thanu’s controversy speech at pushpa event

சர்வைவர் நிகழ்ச்சி முடித்து திரும்பிய நடிகர் அர்ஜூனக்கு கொரோனா தொற்று

சர்வைவர் நிகழ்ச்சி முடித்து திரும்பிய நடிகர் அர்ஜூனக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா படங்களில் பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன்.

இவர் நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர்.

தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

சான்சிபார் என்ற தீவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியை முடித்து திரும்பினார் நடிகர் அர்ஜூன்.

அதன்பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில்,..

‛‛கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.

என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறேன்.

என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Actor Arjun tests positive for COVID-19

இளையராஜா இசையமைத்து சிலம்பரசன் வெளியிட்ட ‘மாயோன்’ பட பாடல் சாதனை

இளையராஜா இசையமைத்து சிலம்பரசன் வெளியிட்ட ‘மாயோன்’ பட பாடல் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘மாயோன்’ பட பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் வெளியிட்ட பாடலொன்று மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து, இணையத்தையும், இசை உலகையும் அதிரச் செய்திருக்கிறது.

கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக ஒப்பில்லா புகழுடன் வலம் வரும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இசை ஞானி இளையராஜாவின் இசையில் ‘மாயோனே மணிவண்ணா..’ எனத்தொடங்கும் ‘மாயோன்’ பட பாடலுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள்.

அண்மையில் வெளியான இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும், இசைஞானி இளையராஜாவின் குரலில் இதற்கு முன்னர் வெளியான ‘ஜனனி ஜனனி..’ என தொடங்கும் பாடலுக்கு பிறகு, இசைஞானி எழுதி இசை அமைத்த ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற பாடலைப் போல் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது என பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பாடலில் இசைஞானியின் இனிய மெட்டும், பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இசை ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், இசை விமர்சகர்கள், பாமரர்கள், இணைய தலைமுறையினர், இளைய தலைமுறையினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற பாடல் இணையத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் ‘மாயோன்’ படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

சிம்பொனி இசைத்த இசைமேதை இளையராஜாவின் மயக்கும் மெட்டில் உருவாகி, காலை நேர பூபாளத் தென்றலாக ‘மாயோனே மணிவண்ணா..’ என்ற பாடல், இனி தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும். வரவிருக்கும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் ஒவ்வொரு இல்லங்களிலும் ஒலிக்கும் பக்தி பாடலின் பட்டியலில் ரஞ்சனி, காயத்ரியின் இனிய குரலில் ஒலிக்கும் ‘மாயோன்’ பட பாடலும் இணையும் என்பது உறுதி.

இதனிடையே ரசிகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் கீதா ஜெயந்தி தின வாழ்த்துக்களையும் தெரிவிக்கும், ‘மாயோன்’ படக்குழுவினர், இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் இசைஞானியின் இந்த பாடலை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது.

தெலுங்கில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பாஸ்கரபாட்லா எழுத, பின்னணி பாடகிகளான சைந்தவி மற்றும் வினயா கார்த்திக் ராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

அங்கும் இந்த பாடலுக்கு பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ilayaraja’s Maayone Manivanna crossed one million lights on YouTube

விஜய்சேதுபதி ஆஜராக கோர்ட் சம்மன்..; கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் மகாகாந்தி மனு

விஜய்சேதுபதி ஆஜராக கோர்ட் சம்மன்..; கிரிமினல் அவதூறு வழக்கில் நடிகர் மகாகாந்தி மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் சில நாட்களுக்கு முன் வழக்கு தாக்கல் செய்தார்.

சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ஜனவரி 4ல் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.

மனுவில்… நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் ஏற்க மறுத்தி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் வழக்கு தொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உண்மை இவ்வாறிருக்க, மறுநாள் மீடியாக்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Case filed against Vijay Sethupathi

ஹரீஷ் கல்யாண் – அதுல்யா ரவி இணையும் புதிய பட அறிவிப்பு.; டைரக்டர் யார்.?

ஹரீஷ் கல்யாண் – அதுல்யா ரவி இணையும் புதிய பட அறிவிப்பு.; டைரக்டர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரீஷ் கல்யாணின் ரசிகர்களுக்கு ஒரு அற்புத செய்தி.

நடிகர் ஹரீஷ் கல்யாண், தனது அடுத்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தற்போதைக்கு “PRODUCTION NO 5” என அழைக்கப்படும் இப்படம் காதல் ஆக்சன் டிராமா திரைப்படமாக உருவாகவுள்ளது. SP CINEMAS நிறுவனம் THIRD EYE ENTERTAINMENT நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை (ஜீவி பிரகாஷ் நடித்த அடங்காதே புகழ் )சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.

அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார். நடிகர் யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். D.இமான் இசை படத்தின் மிகமுக்கிய அம்சமாக இருக்கும்.

இத்திரைப்படம் நேற்று ( டிசம்பர் 13, 2021 ) சென்னையில் எளிமையான சடங்குகளுடன் இனிதே துவங்கியது.

இயக்குநர் வெற்றிமாறன் படத்தின் முதல் ஷாட்டுக்கு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார்.

விஜய் சேதுபதி, ஜீவி பிரகாஷ், ஐஷ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரெக்க மற்றும் வா டீல் படப்புகழ் இயக்குநர் ரத்ன சிவா, எங்கிட்ட மோதாதே படப்புகழ் ராமு செல்லப்பா டோரா படப்புகழ் இயக்குநர் தாஸ் ராமசாமி உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்தினர்.

படத்தின் படப்பிடிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு துவங்கவுள்ளது.

வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வட சென்னை பகுதிகளிலும அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெறவுள்ளது.

ஹரிஷ் கல்யாண் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை, மேலும் அவர் இப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றவுள்ளார்.

இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஶ்ரீதர் ( பரியேறும் பெருமாள் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார்.

SS முர்த்தி (ஆர்யாவின் கேப்டன் மற்றும் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் புகழ் ) கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுஜித் சுதாகரன் ( மோகன்லாலின் லூஸிபர் படப்புகழ் ) உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

Harish Kalyan and Athulya Ravi joins for a new action film

‘பிளட் மணி’-க்காக மீண்டும் பத்திரிகையாளராக மாறிய பிரியா பவானி சங்கர்

‘பிளட் மணி’-க்காக மீண்டும் பத்திரிகையாளராக மாறிய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” ”டிக்கிலோனா” ”மலேஷியா டு அம்னிஷியா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், ஷிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில்,…

“‘ப்ளட் மணி’ படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறேன்.

பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி”.

நடிகர் கிஷோர் கூறுகையில்,…

“வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உலகம் முழுதும் நிகழ்ந்திருக்கும் நகரமயமாக்கலில் இன்று இது சாதாரணமாகிவிட்டது.

‘ப்ளட் மணி’ வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் அவலத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. அதே நேரம் இன்றைய சமூகத்தில் இதில் உள்ள விவரங்களை வெளிப்படுவத்திலும், சமூகத்தில் இது பற்றிய மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கையும் இது வலியுறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பணக்கார வாழ்க்கையைத் தேடி, அனைத்தையும் விட்டுவிட்டு, வெளிநாட்டிற்கு, தெரியாத நிலத்திற்கு பயணம் செய்வதற்கு முன்பு, எவரையும் ஒருமுறைக்கு இருமுறை இந்த படம் யோசிக்க வைக்கும்.

இந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஊடகங்கள் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் உணர்ச்சிகரமான விஷயங்களை திரையில் கொண்டு வந்ததற்காக புகழ்பெற்ற இயக்குனர் சர்ஜுனுடன் மீண்டும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.”

நடிகர் ஷிரிஷ் கூறுகையில்….

, “பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும், தலைப்பு செய்தியை விட அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதையும் கூறும் படைப்பாக வரவுள்ளது”

இயக்குனர் சர்ஜூன் KM கூறுகையில்…

, “ZEE5 இன் மிகச் சிறப்பு மிகுந்த படைப்புகளில் ஒன்றான ‘பிளட் மணி’ படத்தின் இயக்குனராக இருப்பது மிகப் பெருமையான தருணமாகும். வியத்தகு லொகேஷன்களில், சிறந்த நடிகர்களுடனான, மிக அற்புதமான படப்பிடிப்பு அனுபவங்கள் என, ‘பிளட் மணி’ என் வாழ்வின் சூப்பர் ஸ்பெஷல் திரைப்படம் !”

தயாரிப்பாளர் இர்பான் மாலிக் கூறுகையில்….

, “ZEE5 உடன் இணைந்து இந்த அற்புதமான ‘பிளட் மணி’ திரைப்படத்தை உருவாக்கியது மிகவும் பெருமையாக உள்ளது”.

திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ்
ஒளிப்பதிவு – G பாலமுருகன் DFT
இசை – சதிஷ் ரகுநந்தன்
கலை – சூர்யா ராஜீவன்
படத்தொகுப்பு – பிரசன்னா GK
பாடல்கள் – Kugai M புகழேந்தி

‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Catch Blood Money a ZEE5 Original from 24 December

More Articles
Follows