தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருக்கிறார்.
இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது.
தமிழ் பதிப்பில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாட விவேகா எழுதியிருக்கிறார்.
இதுவரை இந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை யூடியுப்பில் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு ஆந்திராவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று டிசம்பர் 14ல் சென்னையில் ‘புஷ்பா’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார் பங்கேற்கவில்லை.
இந்த பாடல் குறித்து அல்லு அர்ஜூன் பேசுகையில்… அது உண்மை தான் என்றார். (அதாவது ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து)
அதற்கு முன்பு ‘புஷ்பா’ படக்குழுவினரை பாராட்டி பேச வந்திருந்தார் பிரபல தயாரிப்பாளர் தாணு.
அவர் பேசுகையில்… சாமி.. சாமி… பாடல் நன்றாக வந்துள்ளது.
அதுபோல் ஓ… சொல்றியா மாமா.. பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியுள்ளது.
இந்த பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.
ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த துப்பாக்கி, தனுஷ் நடித்த அசுரன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.
Producer Thanu’s controversy speech at pushpa event