சிவாஜி-கமல் படங்களை தயாரித்த சித்ரா ராமு காலமானார்

சிவாஜி-கமல் படங்களை தயாரித்த சித்ரா ராமு காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Chithra Ramuபிரபல திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு உடல் நல குறைவால் காலமானார்.

‘ஜல்லிக்கட்டு’, ‘மண்வாசனை’, ‘சூரசம்ஹாரம்’, ‘பெரியதம்பி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சித்ரா ராமு.

சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரவு 7 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

சித்ரா ராமுவுக்கு தங்கம் என்ற மனைவியும், விஜய சரவணன், விஜய கார்த்திக் என்ற இரு மகன்களும், குகப்பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

‘நான் யானை இல்ல குதிரை’- ரஜினி;… ‘நான் யானை’- வடிவேலு

‘நான் யானை இல்ல குதிரை’- ரஜினி;… ‘நான் யானை’- வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vadiveluசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாபா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதன்பின்னர் சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “நான் யானை இல்ல.. குதிரை. கீழ விழுந்தா டக்குனு எழுந்திருப்பேன்” என பொதுமேடையில் ரஜினி பேசினார்.

அதுபோல் சந்திரமுகி படம் மாபெரும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கத்தி சண்டை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நான் யானை என வடிவேலு பேசியுள்ளார். அதுபற்றி விவரம் வருமாறு…

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கத்தி சண்டை’.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, நந்தகோபால் தயாரித்திருக்கிறார். நவம்பர் 18ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இவ்விழாவில் வடிவேலு பேசும்போது…

“ரொம்ப இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள்.

எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு டாப்பு தான். அந்த வெற்றிக்கு காரணம் மக்கள் தான்.

எந்தப் பேப்பர், வாட்ஸ்- அப் எடுத்தாலும் என் படம்தான் கார்டூன் பொம்மையாக வருகிறேன்.

அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட என்னை வைத்து தான் காமெடி பண்ணிப் போடுகிறார்கள்.

24 மணி நேரமும் சினிமாவைப் பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

‘கத்தி சண்டை’ என்றவுடன் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைப் போடும் படம் கிடையாது. இந்தப் படம் ஒரு புத்தி சண்டை.

கதை சரியில்லாமல் தான், நிறைய படங்களை வேண்டாம் என்று சொன்னேன். உண்மையில், எனக்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை.

மக்களிடையே நடக்கும் விஷயங்களை எடுத்து தான், தங்கம் மூலாம் பேசி காமெடியாக மக்களிடையே கொடுத்துவிடுவேன்.

சில நாட்களுக்கு முன்பு எனது அப்பத்தா இறந்துவிட்டது. நான் ஊருக்கு சென்ற போது “ஏம்ப்பா வடிவேலு… எதுல வந்த” என கேட்டது. “ப்ளைட்ல வந்தேன்” என்றேன்.

“டிக்கெட் எவ்வளவு வாங்குறாய்ங்க” எனக் கேட்டவுடன் “4000 ரூபாய் வாங்குறாங்க” என்றேன். “எவ்வளவு நேரத்துல வந்த” என்ற போது “அரை மணி நேரத்துல வந்தேன்” என்றேன். உடனே “4000 ரூபாய் வாங்கிவிட்டு, அரை மணி நேரத்துல கொண்டு வந்து விடுறானா.

ஏண்டா 180 ரூபாய் வாங்கிட்டு ரயிலில் இரவு முழுவதும் படுக்கப் போட்டு கூட்டிட்டு வர்றான். உன்னை ஏமாத்திட்டாங்கடா.. நாலு பெரிய மனுஷங்களை வைத்துப் பேசி காசு வாங்கப் பாருடா” என்று சொன்னது என் அப்பத்தா.

இப்படித்தான் சில காமெடிகளை எடுத்துக் கொள்கிறேன்.

மக்களிடையே என்ன நடக்கிறதோ, அதை தான் அப்படியே என் காமெடிக்குள் வைத்துக் கொள்வேன்.
என்னை பற்றிய பேசிய அனைவருமே என்னை LEGEND என்றார்கள். அப்படியென்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது.

யானைக்கு அதன் பலம் தெரியாது. என்னுடைய வலு என்ன? எனக்கு தெரியாது.

பலம் தெரிந்துவிட்டால், வேறு மாதிரி ஆகிவிடும்.

விஷாலுடன் திரையில் எனது முதல் படம் ‘திமிரு’. அது வெற்றி பெற்றது.

அடுத்து ஒரு தேர்தல். ஜனாதிபதி தேர்தல் மாதிரி ஒரு தேர்தல் நடந்தது. அதிலும் வெற்றி. அது தான் ‘நடிகர் சங்கத்தைக் காணவில்லை’.

இப்போது ‘கத்தி சண்டை’ படத்தில் விஷாலுடன் இணைகிறேன். இதுவும் வெற்றி பெறும். அதற்கு காரணம் விஷாலுடைய நல்ல மனசு” என்று கலகலப்பாக பேசினார் வடிவேலு.

ஒரு தோல்விக்கு பிறகு வெற்றி குறித்து ரஜினி அப்படி பேசியிருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்கும் வடிவேலு அவரது அடுத்த வெற்றி, வலிமை பற்றி இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா…’ சூர்யா பாட்டு ஹிட்டாச்சு

‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா…’ சூர்யா பாட்டு ஹிட்டாச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nenjam Marappathillai stillஎப்படி நடிகர்-நடிகைகளின் கெமிஸ்ட்ரி முக்கியமோ, அதுபோல படத்தின் டைரக்டர் மற்றும் மியூசிக் டைரக்டரின் கெமிஸ்ட்ரியும் ரொம்ப முக்கியம்.

டைரக்டர் நினைப்பதை இசையமைப்பாளர் தன் இசையால் சொல்லி ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அப்படியொரு சிறப்பான கூட்டணி ஒரு சிலருக்குதான் அமையும்.

அதுபோன்ற கூட்டணி அமைத்தவர்கள்தான் செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா.

நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இணைந்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

இதில் எஸ்.ஜே. சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கௌதம் மேனன் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இதில் இடம் பெற்ற ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா…’ என்ற பாடல் வரிகள் தற்போது ஹிட்டாகி வருகிறது.

பவர்புல் ‘பாட்ஷா’… ரஜினி ரசிகர்களுக்காக ரஞ்சித் டார்கெட்?

பவர்புல் ‘பாட்ஷா’… ரஜினி ரசிகர்களுக்காக ரஞ்சித் டார்கெட்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ranjthகபாலி படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து மீண்டும் கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷே தயாரிக்கிறார்.

இப்படத்தை கபாலி படம் போல் இல்லாமல் பாட்ஷா படம் போல் அதிரடியாக உருவாக்கவிருக்கிறாராம் ரஞ்சித்.

அதாவது ரஜினியின் கேரியரில் பாட்ஷாவை மிஞ்ச ஒரு படம் வரவில்லை என ரசிகர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க போகிறார் ரஞ்சித் என சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் இப்படத்தின் லொக்கேஷன் காண மும்பை சென்று வந்தாராம் ரஞ்சித்.

எனவே, பாட்ஷாவை போல் இதுவும் மும்பை பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜித்துடன் சஞ்சிதா ஷெட்டி எப்படி கனெக்ஷன் ஆனார்.?

அஜித்துடன் சஞ்சிதா ஷெட்டி எப்படி கனெக்ஷன் ஆனார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith Sanchita Shettyஅஜித்தின் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா? என்பதே பல நடிகைகளின் கனவாக இருக்கிறது.

அவர் படத்தில் எப்படியாவது கனெக்ஷன் ஆகிவிட வேண்டும் என துடியாய் துடிக்கின்றனர்.

இந்நிலையில் தில்லாலங்கடி, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி வேறு ஒரு வகையில் அஜித்துடன் கனெக்ஷன் ஆகிறார்.

அவரின் சமீபத்தில் பேட்டியில் அவரே அதை கூறியிருக்கிறார்.

‘வேதாளம்’ படப்பிடிப்பின் லட்சுமி மேனனை சந்திக்க சென்றாராம் சஞ்சிதா.

அப்போது அஜித்தையும் சந்தித்து பேசியுள்ளார்.

பல வருடங்கள் பழகிய நபரிடம் பேசுவது மிக இயல்பாக அஜித் இவரிடம் பேசினாராம்.

மேலும் இருவரும் நன்றாக சமைக்க தெரிந்தவர்கள் என்பதால், இருவரும் வெகுநேரம் சமையல் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

‘தெறி’யை வென்று ‘கபாலி’யிடம் தோற்ற ‘பைரவா’

‘தெறி’யை வென்று ‘கபாலி’யிடம் தோற்ற ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay kabali bairavaaகடந்த அக். 27ஆம் தேதி விஜய்யின் பைரவா பட டீசர் வெளியானது.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டீசர் வெளியாகி 185 மணி நேரத்தில் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘தெறி’ பட டீசர் 197 மணி நேரத்தில்தான் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இதன் மூலம் ‘தெறி’யின் சாதனையை ‘பைரவா’ முறியடித்துவிட்டார்.

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட டீசர் ஜஸ்ட் லைக் தட் என்பது போல 40 மணி நேரத்தில் 7 மில்லியன் (70 லட்சம்) பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows