தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
இதில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் & ட்ரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ட்ரைலரில்…
ஒரு கல்லூரியில் படிக்கும் இந்து பெண்ணும் முஸ்லிம் பெண்ணும் தோழிகளாகின்றனர். இவர்கள் ஒரு நாள் பொது இடத்திற்கு செல்லும் போது இந்து பெண்ணின் மீது சில நபர்கள் கை வைக்கின்றனர்.
இதனையடுத்து அந்த இந்து பெண்ணுக்கு முஸ்லிம் தோழி ஒரு அட்வைஸ் சொல்கிறாள்.. ஹிஜாப் அணிந்து தன் உடலை முழுவதுமாக மூடி வந்தால் யாரும் நம்மேல் கை வைக்க மாட்டார்கள் என்கிறார்.
இவர் சிவன் பெரிய கடவுள் என சொல்ல அவள் அல்லாஹ் பெரிய கடவுள் என சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் இந்து பெண்ணின் மனதை மாற்றி முஸ்லிமாக மாற்றுகிறாள். அவளுக்கு திருமணமும் செய்து வைக்கிறாள்.
பின்னர் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் காட்சிகள் இருந்தது. இதுவே பல சர்ச்சைகளுக்கு வழியை வகுத்துள்ளது.
இப்படம் இன்று மே 5-ந் தேதி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் என உளவுத்துறை எச்சரித்து இருப்பதால், படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது என்று தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படம் 25க்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.
Police protection in Tamil Nadu theaters where ‘The Kerala Story’ will be released