தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடன இயக்குனர், நடிகர் என் பன்முகம் கொண்டவர் சிவசங்கர்.
ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது மருமகள் இவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிவசங்கர் கூறியதாவது… “எனது மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும் ஜோதிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது நாங்கள் வரதட்சணை கேட்டதாக மருமகள் ஜோதி தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்கவில்லை.
சில பிரச்சினைகள் எழுந்ததால், அவர்களை தனிக்குடித்தனம் வைத்தோம். ஆனால் பிரச்சினை தீராத காரணத்தால், என் மகன் என் வீட்டுக்கே வந்துவிட்டார்.
தற்போது சமாதானத்திற்கு பிறகு என் மகன் அவருடன் சேர்ந்து வாழ காத்திருக்கிறார்.
ஆனால் எங்களை சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ள ஜோதி, எங்களை மிரட்டுகிறார். ரூ.10 கோடி கேட்டு மிரட்டுகிறார்.
மாண்புமிகு முதல்வர்தான் இப்பிரச்சினையில் தலையிட்டு எங்களை காப்பாற்றவேண்டும்” என்று தெரிவித்துள்ளார் சிவசங்கர்.