JUST IN நெகட்டிவ் ரிவ்யூக்கு நன்றி – கௌதம் மேனன்.; VTK படம் ஹிட்டு இல்ல – ஐசரி கணேஷ்.. சிம்பு முன்னிலையில் பிரபலங்கள் பேச்சு

JUST IN நெகட்டிவ் ரிவ்யூக்கு நன்றி – கௌதம் மேனன்.; VTK படம் ஹிட்டு இல்ல – ஐசரி கணேஷ்.. சிம்பு முன்னிலையில் பிரபலங்கள் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15ல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை ஈட்டியதாகவும் 2வது நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாகவும் செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் கௌதம் மேனன் பேசியதாவது…

சிம்புவின் கடின உழைப்புக்கு நன்றி. இந்த படத்திற்கு நைட் நல்லா தூங்கிட்டு வாங்கன்னு சொன்னது தப்பா போச்சு.

நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்தவங்களுக்கு நன்றி.”

கௌதம் மேனன்

ஐசரி கணேஷ் பேசியதாவது…

இந்த படம் ஹிட்டு இல்ல.. பம்மர் ஹிட்டு.. செம கலெக்சன்.. இந்த படத்திற்கு சிம்புவுக்கு தேசிய விருது கிடைக்கும்..

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 நிச்சயமாக வரும். அதற்காக எழுத்தாளர் ஜெயமோகன் & இயக்குனர் கௌதம் மேனன் உழைத்து வருகின்றனர்.

ஐசரி கணேஷ்

Gautam and Ishari Ganesh talks at VTK Thanks Giving Meet

பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன் – டென்ஷனில் நடிகர் மயில்சாமி

பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன் – டென்ஷனில் நடிகர் மயில்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குணச்சித்திர வேடம் காமெடி வேடம் என எதுவானாலும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் மயில்சாமி.

கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். தனியாகவும் காமெடி செய்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்…

“இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா.

உங்கள் ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். ஆனால் மக்கள்்ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். மதங்களால் மனிதர்களைப் பிரிக்க நினைத்தால் செருப்பால் அடிப்பேன்.” என்றார்.

Actor Mayilsamy angry speech about Religious Politics

சத்யசிவா – சசிகுமார் கூட்டணியில் ‘நான் மிருகமாய் மாற’ ரிலீஸ் அப்டேட்

சத்யசிவா – சசிகுமார் கூட்டணியில் ‘நான் மிருகமாய் மாற’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த படத்திற்கு ‘காமன் மேன்’ என்று முதலில் பெயரிட்டு இருந்தனர்.

பின்னர் அந்த தலைப்பை மாற்றி தற்போது ‘நான் மிருகமாய் மாற’ என தலைப்பு வைத்துள்ளனர்.

சாமானியன் ஒருவன் அவனின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி் இந்த படத்தை இயக்கியுள்ளார் சத்ய சிவா.

இந்த படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் அக்டோபரில் வெளியாகும் என தேதியை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளனர்.

Sasikumar starrer CommonMan is now Naan Mirugamaai Maara

Chendur Film International T. D.Rajha presents, Sathyashivaa Directorial, M. Sasikumar starrer “#CommonMan” is now #NaanMirugamaaiMaara. An action-packed story releasing this October 2022.

https://youtu.be/DdcTBX1fQ14

A @GhibranOfficial Musical

@SasikumarDir @Sathyasivadir

@vikranth_offl @HariPrriya6 @RajaBhatta123 @srikanth_nb @ChendurFilm @td_rajha @dir_rvs @RIAZtheboss @TalkiesMetro @thinkmusicindia

உதவி பெற்றவர்கள் என் காலில் விழுகிறார்கள்.; இனி நான்தான் விழுவேன் – ராகவா லாரன்ஸ்

உதவி பெற்றவர்கள் என் காலில் விழுகிறார்கள்.; இனி நான்தான் விழுவேன் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று தன் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த சந்திப்பு கொளத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இது குறித்து லாரன்ஸ் பேசியதாவது….

“நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன்.
எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.

இன்று செப்டம்பர் 18 முதல் நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன். உதவி கேட்பதற்காக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை, அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக என்னிடம் வரும்போது, ​​உதவி கேட்டு என் காலில் விழுந்து விடுகிறார்கள். நான் விலகிச் செல்கிறேன், குழந்தையின் முகத்தைப் பார்க்கிறேன், உதவிக்காக பெற்றோர்கள் காலில் விழுந்தவுடன் குழந்தை உடனடியாக அழத்தொடங்குகிறது.

பெற்றோர்களும் குழந்தைகளும் படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ளவும், உணரவும் முடிகிறது.

ஏனென்றால் எந்த தந்தையும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு ஹீரோவாக இருக்க தான் விரும்புவார். பணக்காரர்களிடம் பணம் இருப்பதால், அவர்களின் காலில் விழுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

மேலும், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என் காலில் விழ வைக்கிறார்கள். கடவுளும் குழந்தைகளும் ஒன்று என்று நான் நம்புகிறேன்,

சில சமயங்களில், நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, ​​அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இது நியாயமா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே இனிமேல் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்.

எனது சிறிய ஈகோவும் மறைந்துவிடும் என்று நம்புகிறேன். இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை.

இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன்

#சேவையே கடவுள்

என அன்புடன் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Actor Raghava Lawrence statement about his helping routine

விக்கி பிறந்தநாளை உலகப்புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடிய நயன்தாரா.

விக்கி பிறந்தநாளை உலகப்புகழ் பெற்ற இடத்தில் கொண்டாடிய நயன்தாரா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா.

இந்த ஜோடி தற்போது தங்கள் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை விரைவில் இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன்

திருமணத்திற்கு பிறகு வரும் கணவரின் முதல் பிறந்தநாளை என்பதால் அதனை விமரிசையாக துபாயில் குடும்பத்தினர் உடன் கொண்டாடி உள்ளார் நயன்தாரா.

துபாயில் உள்ள உயரமான கட்டிடமான உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கஃலிபா முன் மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினர் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் விக்கி.

விக்கி பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா

Vignesh celebrates Dreamy Birthday at Burj Khalifa With Nayanthara

வாழ்க்கையை முடித்துக் கொண்ட ‘வாய்தா’ பட நடிகை.; கடிதம் சிக்கியது.. போலீஸ் விசாரணை!

வாழ்க்கையை முடித்துக் கொண்ட ‘வாய்தா’ பட நடிகை.; கடிதம் சிக்கியது.. போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக ஓரிரு படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா.

அண்மையில் ரீலீசான ‘வாய்தா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தும் இருந்தார்.

இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்பதால் இந்த உலகை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது தற்கொலை முடிவிற்கு யாரும் காரணமில்லை” எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Vaitha Tamil movie heroine commits suicide

More Articles
Follows