தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’.
இப்படத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியானபோதே அதில் ஜோதியாக பேசிய தே… பயலே என்ற கெட்ட வார்த்தையால்து பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் நேற்று ரிலீஸ் ஆன இப்படத்தில், ‘கோயிலும் குப்பை மேடும் ஒண்ணு தான்’ என போலீஸ் அதிகாரி பேசுவது போல் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது.
இந்துக் கோயில்களை அவமதிக்கும் இந்த வசனத்தை நீக்கக்கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வசனத்தைப் பேசிய ஜோதிகா மற்றும் படத்தை இயக்கிய பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Police complaint against Jyothikas dialogue in Baalas Naachiyaar