தேசிய விருது கிடைத்தால் விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்.. ஜிவி.பிரகாஷ்

தேசிய விருது கிடைத்தால் விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்.. ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and vijayபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘நாச்சியார்’.

இதுநாள் வரை ஜிவி. பிரகாஷின் நடிப்பை இகழ்ந்தவர்கள் கூட இந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டினர்.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய்யும் ஜிவி. பிரகாஷைப் பாராட்டியுள்ளாராம்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளதாவ… “நாச்சியார் படம் பார்த்துவிட்டு விஜய் அண்ணா எனக்கு மெசேஜ் செய்தார்.

கடந்த வருடம் அவருடைய பிறந்தநாளில் சந்தித்தபோது, பாலா படத்தில் நடிப்பதற்காக வாழ்த்து சொல்லியிருந்தார்.

இந்த படத்தில் என் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்.

அவர் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்படி எனக்குத் தேசிய விருது கிடைத்தால், அதை விஜய் அண்ணாவுக்கு சமர்ப்பிப்பேன்” என்றார்.

என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத் தரவேண்டாம் : ரஜினி

என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத் தரவேண்டாம் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஇன்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார்.

அப்போது அவர் பேசிய பேச்சின் முக்கிய துளிகள் இதோ…

1. ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும்.

2.மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்.

3.ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும்; இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன் .

4.இது சாதாரண பில்டிங் கிடையாது. 32 ஃப்ளோர். 32 மாவட்டம், அதனால் ஃபவுண்டேஷனை ஸ்ட்ராங்காக போடனும் .

5.அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம்.

6.அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.

7.எனது ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம்; அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள்.

8.விரைவில் உங்கள் அனைவரையும் உங்கள் மாவட்டத்தில் சந்திக்கிறேன்.

9. காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரவேற்கிறேன்.

10.கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது; கமல் சிறப்பாக செயல்படுவார்.

11.32 மாவட்ட நிர்வாகிகளை ஒரே நேரத்தில் சந்திக்க சிறிது நேரம் ஆகும்; நேரம் வரும்போது நேரடியாக சுற்றுப்பயணம் மூலம் ரசிகர்களை சந்திப்பேன்.

12. நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஆண்டாளை அவமதிக்கிறது அனுஷ்கா படம்?; தடை கோரி வழக்கு

ஆண்டாளை அவமதிக்கிறது அனுஷ்கா படம்?; தடை கோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brammanda nayagan posterஅனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இன்று வெளிவர உள்ள ‘அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்’ திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்படம் ஆண்டாளை மையப்படுத்தி எடுத்துள்ளதால் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் வைரமுத்து ஆண்டாளின் பெருமைகளை உணர்ந்தவர் உயர்த்தியவர் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

” படம் பெருமாள் வரலாறு ,அவர் மீது பக்தி கொண்டவரின் பக்தி பற்றி அழகாகச் சொல்கிற படம். இது ஆந்திராவில் ஓடி வெற்றி பெற்ற பக்தி மணம் கொண்ட பிரமாண்ட வெற்றி படமாகும்.

படத்தையே பார்க்காமல் விளம்பரத்துக்காக வழக்கு போட்டுள்ளதால்

படத்துக்குப் பிரச்சினை எழுந்துள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.

இப்படி விளம்பரம் தேட வழக்கு போடுகிறவர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும் ,உறவினரோடும் ஊர்க்காரர்களோடும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்த்து விட்டு ஆண்டாளைப் பற்றி தவறாக எதுவும் உள்ளதா என தெரிந்து கொள்ளட்டும்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

இன்று முதல் உலமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்.

கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and arvind kejiriwalமதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கொடியை ஏற்றி கட்சியின் பெயரை அறிவித்தார்.

கமல்ஹாசனின் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் இரு கட்சிகளுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளை நிராகரித்து விட்டு கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.

அரசியல் மாற்றாக உருவாகியுள்ள கமல் கட்சிக்கு தமிழக மக்கள் இனி வாக்களிக்கலாம்.

அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக கமல் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்.

கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிற தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு;லாரன்ஸ் ஏற்பாடு

ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு;லாரன்ஸ் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceபிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு

லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் ஶ்ரீ ராகவேந்திரரின் பிறந்த நாளான இன்று சீரடி சாய்பாபா சிலையை அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நிறுவி பிரதிஷ்டை செய்கிறார்.

இரண்டு குருக்களான ஶ்ரீ ராகவேந்தரும் சீரடிபாபா வும் ஒரே இடத்தில் இருப்பது மாதிரியான ஒரு கோயிலை அமைக்க வேண்டும் எனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து 5 அடி உயர சிலையை தயார் செய்து வரவழைத்து இன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை செய்கிறார் லாரன்ஸ்.

இளைஞர்களை விவசாயத்திற்கு அழைக்கும் கார்த்தி

இளைஞர்களை விவசாயத்திற்கு அழைக்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadai kutty singam Karthi2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “.

முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர்.

படத்துக்கு இசை D.இமான், ஒளிப்பதிவு R.வேல்ராஜ், கலை வீரசமர், இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார்.

எப்படி Engineer, Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.

இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் IT வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள்.

அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார்.

படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார்.

வெயில், பனி, மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளார்.

சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள்.

உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த டைட்டிலாம்.

பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

More Articles
Follows