தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘நாச்சியார்’ படம்
நல்ல விமர்சனங்களை பெற்று
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு பல பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.
‘நாச்சியார்’ படத்தை பார்த்து நடிகர் சிவகுமார் அண்மையில் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் இப்போது நடிகர் கார்த்தியும் ‘நாச்சியார்’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘நாச்சியார்’ ரொம்பவும் ‘நீட்’டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் .
பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட
இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.