தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையில் பாலா உருவாக்கியுள்ள படம் நாச்சியார்.
இதில் நாயகனாக ஜிவி. பிரகாஷ் நடிக்க, கதையின் நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார்.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த தே….. என்ற கெட்ட வார்த்தைதான்.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இப்படத்தை இயக்கிய பாலா மற்றும் அந்த கெட்ட வார்த்தையை பேசிய ஜோதிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
பெண்மையை இழிவுப்படுத்தும் கெட்ட வார்த்தை பயன்படுத்தியாகவும், பொது வெளியில் ஆபாசமாக பேசிய குற்றத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாம்.
கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.