தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில படங்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கிய காரணம் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்தான்.
இது அண்மைகாலமாக அதிகரித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் உருவான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இருபடங்களின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களால் அதிகளவில் பாராட்டப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் குறித்து பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன் தன் சமீபத்திய பேட்டில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது… மெர்சல் பட சூட்டிங் தொடங்கிய முதல் அதன் ஃபஸ்ட் லுக் போஸ்டருக்காக விஜய் மற்றும் அட்லீ இருவருமே பயந்தனர்.
காலை 10 மணிக்கு ஷுட்டிங் என்றால் விஜய் 8.30 மணிக்கே வந்து மேக்கப் போட்டு தயாராக இருப்பார்.
முதல் ஃபஸ்ட் லுக்கில் விஜய்யுடன் ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் இருக்கும்.
இதற்காக கிட்டதட்ட 2000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அதிலிருந்துதான் சில போட்டோக்களை படக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.
முதலில் விஜய்யை தனியாகவும் பின்னர் காளையை தனியாகவும் எடுத்து அதை ஒன்றாக இணைத்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.