தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘முதல்வன்’ படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் நடித்திருப்பார். அது சினிமாவில் நடைபெற்ற ஒன்று.
தற்போது ஒரு நாள் கைதியாக அதுவும் எந்த வழக்கிலும் சிக்காமல், கோர்ட் கேஸ் என செல்லாமல் சிறையில் கைதியாக கம்பி எண்ண ஆசை இருக்கா.?
இந்த விபரீத ஆசை உள்ளவர்களுக்காகவே கர்நாடக சிறைத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா என்ற ஜெயில் உள்ளது.
இந்த சிறையில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சிறையில் தான் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.
‘கைதியின் வாழ்வில் ஒரு நாள்’ என்ற கருத்தை முன்வைத்து, 24 மணிநேரத்திற்கு ஒரு கைதியின் வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் விதமாக கர்நாடக சிறைத்துறையினர் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
இப்போது இந்த முயற்சியை செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்காக சிறைத்துறையினர் காத்திருக்கின்றனர்.
ஒரு நாள் டாஸ்க் என்ன தெரியுமா..?
மற்ற கைதிகளை போலவே சீருடை அணிவது, கைதி எண்ணுடன் மற்ற கைதியுடன் சிறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மற்ற கைதிகளை போல அவர்களுடன் தரையில் தூங்க வேண்டும்.
கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவைச் சாப்பிடுவது மற்றும் கைதிகள் மேற்கொள்ளும் தோட்டக்கலை, சமையல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் செய்ய வேண்டும்.” என்கின்றனர்.
மேலும் கைதிகளின் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதோடு, குற்றச் சம்பவங்களில் சிலர் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலே இதுபோன்ற ‘ஒரு நாள் கைதி’ திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அரசு ஒப்புதல் கிடைக்குமா? என்பதை பார்ப்போம்..
Pay Rs 500 live like a prisoner in Belagavis Hindalga Jail.