தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அர்ஜூன் நடித்த ‘வானவில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.
பிறகு கமல்ஹாசன் உடன் ’விருமாண்டி’ திரைப்படத்தில் அன்னக்கிளி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானர் அபிராமி
’மிடில் கிளாஸ் மாதவன்’ ’சமுத்திரம்’ ’சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ‘கல்கி’ என்ற பெண் குழந்தையை தத்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதன் பின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டதாகவும் அபிராமி கூறினார்.
அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து கூறியதாவது ” அன்பு நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், கல்கி கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம், அது எல்லா வகையிலும் வாழ்க்கையை மாற்றிவிட்டது.” என பதிவிட்டுள்ளார்.
மேலும், அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
abhirami adopt a baby child world mothers day