விநாயகருடன் சேர்த்து நாலு பேச்சுலர்ஸ் உருவாக்கிய ஃபேமிலி படம் இது – விஷால்

விநாயகருடன் சேர்த்து நாலு பேச்சுலர்ஸ் உருவாக்கிய ஃபேமிலி படம் இது – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் செப்-3ஆம் தேதி வெளியாகிறது. செப்-15ல் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களிடம் விஷால், எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவரும் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் விஷால் பேசும்போது…

“விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக செப்டம்பர் 15ல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியில் செப்டம்பர் 22லும் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இதில் மார்க், ஆண்டனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். முதல்முறையாக இதில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். அப்பா கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளேன். மார்க்கிற்கு ஜோடியாக ரித்து வர்மாவும் ஆண்டனிக்கு ஜோடியாக அபிநயாவும் நடித்துள்ளனர்.

சயன்ஸ் பிக்சன் டைம் ட்ராவல் படமாக இது உருவாகியுள்ளது. படத்தில் 1970 மற்றும் 1990 காலகட்டங்கள் என மாறிமாறி காட்சிகள் நகரும். ஆனால் பிளாஷ்பேக் போல இல்லாமல் ஒரு காட்சியில் 1975 ஆம் வருடமும் இன்னொரு காட்சியில் 1995 ஆவது வருடமும் என அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

அதேசமயம் இது ‘ஏ’ சென்டருக்கு மட்டுமல்லாது கடைக்கோடி கிராமத்தில் இருக்கிற ரசிகருக்கும் தெளிவாக புரியும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளும் படப்பிடிப்பின் கடைசி நாளும் மட்டுமே பகலில் படப்பிடிப்பு நடைபெற்றது. மீதி அனைத்து நாட்களுமே இரவு நேர படப்பிடிப்புதான்.. படத்தில் எழுபதுகளில் நடக்கும் கதையில் பழைய எல்ஐசி கட்டிடம், டபுள் டெக்கர் பஸ் என பழமையான மெட்ராஸையும் காட்டியுள்ளோம்.

இதற்காக செட் மற்றும் கிராபிக்ஸ் பணிகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். கிட்டத்தட்ட 3000 கிராபிக்ஸ் காட்சிகள் இதில் இடம் பெறுகின்றன. அதேபோல 99 சதவீத காட்சிகள் செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன.

நான் சிவப்பு மனிதன் படத்தை தொடர்ந்து எட்டு வருடத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் என் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே படத்திற்கு தேவையான பலத்தை தனது இசையால் கொடுத்துள்ளார்.

இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டு வேலைகளை செய்து வருகிறோம். அந்த வகையில் நான், எஸ்.ஜே சூர்யா இயக்குனர் ஆதிக் மற்றும் விநாயகர் என நான்கு பிரம்மச்சாரிகள் சேர்ந்து இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு கொண்டு வருகிறோம்.” என்றார்.

4 Bachelors made Mark Antony family movie

நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு.; சீரியஸ் டிஸ்கஷனில் தேசிய பெரியசாமி

நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு.; சீரியஸ் டிஸ்கஷனில் தேசிய பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் முதல் காட்சி துவங்கும் போதே அதில் ரஜினியின் கபாலி சிலை திரையில் காட்டப்படும்.

அப்போது இயக்குனர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை நாம் உணரலாம்.

மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கொடுத்த நிலையில் அவரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டி எனக்கும் ஒரு கதை ரெடி செய்யுங்கள் என அன்பு கட்டளை விடுத்திருந்தார்.

எனவே ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெருங்குசாமி இயக்குவார் என திரையுலகம் எதிர்பார்த்த நிலையில் சிம்பு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் தேசிங்கு.

ரஜினியின் தீவிர ரசிகரான தேசிங்கு பெரியசாமிக்கு தன் பேனரில் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் கமல்ஹாசன்.

இந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆனாலும் இதன் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு நிற்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிம்புவின் முகம் காட்டப்படவில்லை என்றாலும் அவர் தேசிங்கு பெரியசாமி உடன் சீரியஸ் டிஸ்கஷனில் இருப்பது தெரிகிறது.

இந்த புகைப்படம் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Simbu and Desingu Periyasamy serious discussion

கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷை இயக்கும் அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனர்

கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷை இயக்கும் அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐந்து படங்கள் மட்டும் தான் இயக்கி இருக்கிறார்.. ஐந்தும் ஐந்து ரகம். சதுரங்க வேட்டை என்ற முதல் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ஹச் வினோத்.

முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற போலீஸ் அதிகாரியின் உண்மை சம்பவத்தை இயக்கியிருந்தார்.

கார்த்தி நடித்த இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகவே அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வினோத்.

தொடர்ந்து மூன்று அஜித் படங்களை இயக்கினார். நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு மூன்று படங்களை இயக்கினார்.

இதில் வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றாலும் துணிவு படம் வினோத்துக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

விரைவில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்க உள்ள படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் வினோத்.

எனவே தான் வினோத் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கமல் – வினோத் இணையும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தை வினோத் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

After Kamal movie Vinoth will direct Dhanush

‘ஜெயிலர்’ சக்சஸ்.: 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு 1 கோடி கொடுத்த சன் பிக்சர்ஸ்

‘ஜெயிலர்’ சக்சஸ்.: 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு 1 கோடி கொடுத்த சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகிய மூவருக்கும் விலை உயர்ந்த காரை பரிசளித்திருந்தார் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன். மேலும் மூவருக்கும் மிகப்பெரிய தொகையும் சம்பளமாக வழங்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் கலாநிதி மாறனின் மனைவி காவிரி அவர்கள் அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். நூறு குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக இந்த தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures handed over a cheque for Rs.1 Crore to Apollo Hospitals

ஷாருக்குடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

ஷாருக்குடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

தற்போது ஷாருக்கான் உடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.

இதில் ஷாருக், அட்லி, விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் நாயகியாக நடித்திருந்த நயன்தாரா பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி ஷாருக்கான் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் .

அவர்கள் திருப்பதி கோயிலில் சென்று வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Sharukh Nayanthara Vickky thirupathi temple visit

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்ட்டாகிராம் என்ற சமூக வலைதள பக்கத்தில் இணைந்தார் நடிகை நயன்தாரா.

அவர் இணைந்தது முதல் அவரது ரசிகர்கள் பலரும் அவரைப் பின் தொடர்ந்தனர். இந்த அக்கௌண்டில் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் இதோ வந்துட்டேன்னு சொல்லு என்ற ரஜினியின் கபாலி பட டயலாக்கையும் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் ட்ரெய்லரை பகிர்ந்தார் நயன்தாரா. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3 தேதி வெளியான ‘இறைவன்’ பட ட்ரைலரை நயன்தாரா பகிரவில்லை.

‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகி நயன்தாரா தான்.

ஷாருக்கான் பட டிரைலரை பகிர்ந்த நயன்தாரா ஜெயம்ரவி பட ட்ரைலரை மட்டும் பகிராதது ஏன் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Nayanthara support Hindi Actors not Tamil actors

More Articles
Follows