தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ‘நெஞ்சுக்கு நீதி’.
போனிகபூர் தயாரிப்பில் அருண் ராஜா இயக்கிய இந்த படம் நேற்று ரிலீசானது.
திமுக கட்சித் தொண்டர்கள் இலவசமாக இந்த படத்தை பார்க்க முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் ஒரு பிரபல தியேட்டரில் அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்தன. நம் தளத்தில் இதன் விமர்சனத்தை படித்திருப்பீர்கள்.
நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி
இந்த படத்தை உதயநிதி ரசிகர்கள் மற்றும் திமுக கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைத்துள்ளனர்.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது குமரி மாவட்டத்தில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கட் அவுட்களால் நிச்சயம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பலத்த காற்றால் எந்த நேரமும் பேனர்கள் சரிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திலேயே வண்டிகளை ஓட்டி வருகின்றனர்.
கட் அவுட் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உயர்நீதிமன்றம், சாலையோரங்களில் கட் அவுட் வைக்கக்கூடாது என உத்தரவு போட்டது.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதாலும் உதயநிதி எம்எல்ஏ ஆக இருப்பதாலும் இதனை காவல்துறை கண்டுக்காமல் செல்கிறது.
மேலும் பல பேனர்களில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் படங்கள் உள்ளதால் பேனரை அகற்றாமல் போலீஸாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
ஆனால் பேனர் விழுந்தால் பாதிக்கப்படுவது மக்கள்தானே…
மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மூலம் அநீதி ஏற்படாமல் தடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்..?
Nenjukku Needhi release : Injustice done by Udayanithi stalin fans to the people ?