தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
இந்த படம் பாராட்டுகளை பெற்ற நிலையில் அடுத்த படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ்.
கலையரசன் மற்றும் நிகிலா விமல் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வாழை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இது சிறுவர்களை மையப்படுத்தி உருவான படமாகும். இந்த படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ்.
இதில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில் தொடங்க மாரி செல்வராஜ் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.
தூத்துக்குடியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பின்னர் கபடி போட்டியில் பல விருதுகளை வென்று இந்திய அரசின் அர்ஜுனா விருதையும் வென்றவர் மனத்தி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
Mari Selvaraj next movie after Maamannan and Vaazhai