தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்ற மகாத்மா காந்தியின் வசனத்துடன்தான் படம் தொடங்குகிறது. காந்தி மகான் என்பதுதான் விக்ரம் கேரக்டர் பெயர்.
ஒரு தாதாவுக்கும் ஒரு போலீசுக்கும் நடக்கும் பாச போராட்டமே இப்படத்தின் ஒன்லைன்.
கதைக்களம்..
சுதந்திர போராட்ட தியாகி குடும்பம். காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் என்ற விக்ரம்.
குழந்தை பருவம் முதலே மது ஒழிப்பு, அகிம்சை என வளர்க்கப்படுகிறார்.
அதன்படி அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிக்கு சேர்கிறார்.
மனைவி சிம்ரன்.. ஒரு மகன் துருவ் (தாதா பாய் நவ்ரோஜி) என பிடிக்காத வாழ்க்கையை நகர்த்துகிறார். 40 வயதாகியும் ஒரு கட்டுப்பாடிலேயே செல்கிறார். மனைவி வேற பிடிவாத குணம் கொண்டவர்.
ஒரு நாள் மனைவி , மகன் வெளியூர் செல்ல தனியாக இருக்கும் விக்ரம் சரக்கடிக்கிறார். சிகரெட் பிடிக்கிறார். இன்று ஒருநாளாவது சுதந்திரமாக தனக்கு பிடித்தப்படி வாழ நினைக்கிறார்.
சாராயக்கடையில் பால்ய நண்பன் சத்யவான் (பாபி சிம்ஹா) சந்திக்க அன்று இரவே அவரின் வாழ்க்கை தடம் மாறுகிறது.
மறுநாள் குடும்பத்தில் பிரச்சினை எழ, சிம்ரன் இவரை பிரிந்து தன் மகனுடன் வட இந்தியா செல்கிறார்.
வேறுவழியில்லாமல் தனியாக இருக்கும் விக்ரம் தன் நண்பனுடன் இணைந்து ஜாலியாக வாழ்கிறார். பார்களை திறக்கின்றனர். தங்கள் கம்பெனி சார்பாக சரக்குகளை விற்கின்றனர். கோடிக்களில் புரளுகின்றனர்.
இவர்கள் அந்த ஏரியாவின் தாதா போல உருவாகுகின்றனர். அரசியல்வாதிகள் வரை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
20 – 25 வருடங்களுக்கு பிறகு என்கௌண்டர் ஸ்பெஷல் போலீஸ் ஆபிசராக வருகிறார் விக்ரம் மகன் துருவ்.
அன்றுமுதல் அப்பா மகன் போராட்டம் வெடிக்கிறது. பாபி சிம்ஹா ஆட்களை என்கௌண்டரில் போடுகிறார் துருவ்.
நண்பனா..? மகனா-..? என்ன செய்தார் விக்ரம்..? அப்பா.? கடமையா..? என்ன செய்தார் துருவ்..? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம் தான். காந்தி மகான் கேரக்டரில் கச்சிதம். நண்பன் மகன் என க்ளைமாக்சில் இவர் நகர்த்தும் விஷயங்கள் வேற லெவல். விக்ரமுக்கு உண்மையான கம்பேக்.. ஜாலியாக ஒரு வாழ்க்கை.. த்ரில்லாக ஒரு வாழ்க்கை… பாசமாக ஒரு வாழ்க்கை என வெரைட்டி காட்டியுள்ளார்.
தாதா பாய் நவ்ரோஜியாக வருகிறார் துருவ். அப்பாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். ஒரு வேளை குட்டி 16 அடி பாயும் என நினைத்து பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். திடீரென திடீரென கத்துகிறார். இது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
மற்றபடி பக்கா ஷேவிங் செய்து மாணவன்.. தாடி வைத்த என்கௌண்டர் போலீஸ் என மிரட்டியிருக்கிறார் துருவ் விக்ரம்.
கார்த்திக் சுப்பராஜ் படம் என்றால் பாபி சிம்ஹா வேற மாரி.. வேறமாரி.. ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை அசத்தியிருக்கிறார் சிம்ஹா.
சிம்ரன் பெரிதாக கவரவில்லை. வாணிபோஜன் படத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தி வந்தது.? ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை.
டெக்னிஷியன்கள்..
விக்ரமின் வளர்ச்சி, மதுபான தயாரிப்பு என கதை செல்வது சலிப்பை தட்டுகிறது. பாடல்கள் தேவையில்லாத ஆணிகள்.. ஒரு பாடல் கூட உருப்படியாக இல்லை. முதல்பாதி முடிவதற்குள் நமக்கு சோர்வு வருகிறது
துருவ் வந்த பிறகுதான் படத்தின் கதை சூடுபிடிக்கிறது.
ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அசத்தல் ரகம். 1968 முதல் 2018 வரை காட்சிகளை வேறுப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு.
எடிட்டர் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம். படத்தின் நீளம் பெரிய குறையாக உள்ளது.
அப்பா – மகன் போட்டியில் வெல்வது யார்.? என்ற சுவாரசியமான கதையை வைத்து மூன்று மணி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
மேலும் வழக்கமான அவரது பாணியில்தான் இப்படம் நகர்கிறது. சில ட்விஸ்ட் ரசிக்கும்படி உள்ளதை பாராட்டலாம். ஆனால் கேங்ஸ்டர் கதையில் சில மாற்றங்களை இனிவரும் காலங்களில் கார்த்திக் சுப்பராஜ் செய்தால் பல வெற்றிகளை பெறலாம்.
ஆக… இந்த மகான்.. கேங்ஸ்டர் ட்ரீட்
Mahaan movie review and rating in Tamil