BREAKING பிரசிடென்ட் மரணத்தில் தேவா பாட்டு; தமிழ் மீடியா கண்டுக்கல.; ரஜினி ஓபன் டாக்

BREAKING பிரசிடென்ட் மரணத்தில் தேவா பாட்டு; தமிழ் மீடியா கண்டுக்கல.; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் தமிழ் சினிமா ரசிகர்களை தன் இசையால் கட்டி போட்டவர் தேனிசை தென்றல் தேவா.

1992 இல் வெளியான ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் படு பிரபலமானார் தேவா.

இந்த படத்திற்கு ரஜினி என்ற பெயருக்கு இவர் போட்ட டைட்டில் மியூசிக் தான் 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் ரஜினி படங்களுக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ரஜினியின் அண்ணாமலை பாட்ஷா அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் தேவாவின் இசை தான் பிரபலம். தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் விஜய்.

அதுபோல் அஜித்தின் ஆசை, வாலி படத்திற்கும் இசையமைத்துள்ளார்..

மேலும் பிரஷாந்த் விஜயகாந்த் கார்த்திக், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார் தேவா.

கானா பாடல்கள் என்றாலே தேவா தான் என்றளவில் படு பிரபலமாக இருந்தார்.

அதன் பின்னர் படிப்படியாக தன் படங்களை குறைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 20 தேவாவின் பிறந்தநாளையும் அவரது 30 வருட சினிமா பயணத்தையும் முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் ரஜினி பேசும்போது..

“சிங்கப்பூர் பிரசிடெண்ட் செல்லப்பன் ராமநாதன் ஒரு உயில் எழுதி வைத்தார்.

அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான்.

அவர் எழுதிய உயிலில் நான் இறந்த பின்னர் என்னை அடக்கம் செய்யும் முன் தேவா இசையமைத்த “தஞ்சாவூர் மண்ணெடுத்து….” என்ற பாடல் ஒலிக்க வேண்டும். அதன் பின்னரே என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார்.

(இந்த பாடல் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் இடம்பெற்றது வைரமுத்து பாடல் எழுதியிருந்தார். முரளி & மீனா நடித்திருந்தனர்)

அவரின் ஆசை படியே அவர் இறந்த பின்னர் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

இந்த செய்தியானது சிங்கப்பூர் மலேசியா ஹாங்காங் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. பல நாடுகளில் அந்தப் பாடலின் அர்த்தங்களையும் பிரதிபலித்தனர்.

ஆனால் தமிழ்நாட்டில் எந்த பத்திரிகையும் அந்த செய்தியை கண்டுக்கவில்லை. அது தொடர்பான ஒரு செய்தியும் வெளியிடவில்லை.

நம் தமிழரின் பெருமையை பத்திரிகைகள் போற்ற வேண்டும். நெகட்டிவான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பாசிட்டிவான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

BREAKING ஒரே மாதிரி படம் பண்ணுவேன்.; இந்த டைரக்டருக்கு புரொடியூசர் கார் கொடுக்க கூடாது – சசிகுமார்

BREAKING ஒரே மாதிரி படம் பண்ணுவேன்.; இந்த டைரக்டருக்கு புரொடியூசர் கார் கொடுக்க கூடாது – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஹேமன்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘காரி’.

படத்தின் நாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்துள்ளார்.

முக்கிய வேடங்களில் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ திரைப்படம் வரும் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை தீ நகரில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது…

“நான் எப்போதும் கிராமத்து படங்களை செய்வதாக பலரும் கேட்கின்றனர். என்னுடைய பூர்வீகம் அதான்.

அந்த கலாச்சாரத்தில் தான் வளர்ந்தேன். எனவே கிராமத்து படங்களை தான் நான் செய்தேன்..

மேலும் இந்தியாவை விட்டு பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற கிராமத்து படங்களை பார்ப்பதில் தான் நாம் நாட்டோடு ஒன்றிணைப்பது போல இருக்கும். அவர்களும் அது போல தான் கேட்கிறார்கள்.

எனவே நான் கிராமத்து படங்களை தான் தொடர்ந்து செய்வேன். இந்த படம் சிறப்பாக வந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஹேமண்த் நன்றாக இயக்கியுள்ளார். இந்த படம் வெற்றி அடையும் போது படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு கார் கொடுக்கக் கூடாது.

அதற்கு பதிலாக அவர் நடிகர் கார்த்தி படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுக்க வேண்டும். கார்த்திக் அவருக்கு நண்பர். நெருக்கமானவர்.”

இவ்வாறு சசிகுமார் பேசினார்

தனுஷ் விலகியதால் அந்த இடத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ரஜினியின் புது ஹீரோ

தனுஷ் விலகியதால் அந்த இடத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ரஜினியின் புது ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

இதற்கான நிகழ்வு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியினை பிரபல நடிகை அர்ச்சனா மற்றும் விஜய் டிவி பாலா ஆகியோர் தொகுத்து வழங்கனர்.

படத்தின் தயாரிப்பாளர் ரவி தேஜாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இந்த ட்ரைலர் இறுதியில் படத்தை டிசம்பர் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம் முன்பு 2022 டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 2023 பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனவே டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ள வரிசையில் இருந்து தனுஷ் விலகியதால் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் அதே தேதியில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் விஷ்ணு விஷால் நடித்த படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டி எஸ் பி (DSP) என்ற படமும் டிசம்பர் 2ம் தேதி தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்:…

ரஜினிகாந்த் நடிப்பில் (கெஸ்ட் ரோல்) உருவாக உள்ள ‘லால் சலாம்’படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

‘ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ்.. ரசிகர்களுடன் போட்டோ.; நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

‘ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ்.. ரசிகர்களுடன் போட்டோ.; நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணி மன்றங்களையும் நடத்தி வருகிறார் விஜய்.

இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை அவ்வப்போது நடத்தி வருவது விஜய்யின் வழக்கம்.

இன்று நவம்பர் 20ல் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய சென்னை ECR பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களைப் பார்த்து விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே..’ பாடல் ஸ்டைலில் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

மேலும் 300-க்கும் மேற்பட்டோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

துணிவு-க்கு ரெட் ஜெயன்ட்..; வாரிசு-க்கு 7 ஸ்கீரின் ஸ்டூடியோ.; சபாஷ் சரியான போட்டி

துணிவு-க்கு ரெட் ஜெயன்ட்..; வாரிசு-க்கு 7 ஸ்கீரின் ஸ்டூடியோ.; சபாஷ் சரியான போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ’துணிவு’ படம் வரும் 2023 பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக லைக்கா அறிவித்துள்ளது.

ஏற்கனவே ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனமும் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ‘வாரிசு’ படத்தை வம்சி இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படமும் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ரஜினியுடன் நான்.; தமிழில் உதயநிதி.. தெலுங்கில் ரவிதேஜா.; ‘கட்டா குஸ்தி’ விழாவில் விஷ்ணு விஷால் உருக்கம்

BREAKING ரஜினியுடன் நான்.; தமிழில் உதயநிதி.. தெலுங்கில் ரவிதேஜா.; ‘கட்டா குஸ்தி’ விழாவில் விஷ்ணு விஷால் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதற்கான நிகழ்வு தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியினை பிரபல நடிகை அர்ச்சனா மற்றும் விஜய் டிவி பாலா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர் ரவி தேஜாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

ரஜினி & விஷ்ணு விஷால் இணைந்து நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த விழாவில் விஷ்ணு விஷால் பேசும்போது…

நான் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தேன். அப்போது எனக்கு கிரிக்கெட்டும் ஒத்து வரவில்லை.

சினிமாவும் ஒத்து வரவில்லை. இதை விட்டு விலகலாமா என்று நினைத்தேன். அப்போது ஒருமுறை ரஜினியை சந்தித்தேன்.

இன்று ரஜினிகாந்துடன் நடிக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?என்றார்.

மேலும் பேசுகையில்..

“தமிழ்நாட்டில் எனது சினிமாவில் உதயநிதி மிக உதவியாக இருக்கிறார்.

அது போல தெலுங்கில் ரவி தேஜா அண்ணன் உதவியாக இருக்கிறார். அவரை சில முறை மட்டுமே சந்தித்தேன். ஆனால் அத்தனை பாசிட்டிவாக பேசினார். அவருடன் படம் செய்வதில் எனக்கு சந்தோஷம். அவர் இந்த படத்தை தயாரிக்க உடனே ஒப்புக்கொண்டார்.”

இவ்வாறு விஷ்ணு விஷால் பேசினார்.

More Articles
Follows