தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளாவில் மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு மவுசு இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வந்தால் எளிதாக ஜெயிப்பதில்லை.
அதற்கு காரணம் அங்குள்ள ரசிகர்கள், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கின்றனர்.
ஆனால் நம்ம தமிழ்நாட்டுல சினிமா ஸ்டார்ஸ்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் மதிப்பு இந்திய சினிமாவுக்கே தெரியும்.
இதனால் இங்குள்ள மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளன்று கிட்டதட்ட 7 முதல் 8 காட்சிகள் வரை திரையிடப்படும்.
லிங்கா, கபாலி படக்காட்சிகள் எல்லாம் நள்ளிரவு 2 மணிக்கே தொடங்கியது.
இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களும் அதிகாலையில் தொடங்கியது.
ஆனால் இந்த அதிகாலை ஸ்டார் தரிசன வழக்கம் என்றைக்கும் கேரளாவில் இருந்தது இல்லை.
இந்நிலையில் முதன்முறையாக இந்த மரபுகளை மோகன்லால் உடைத்தெறிகிறார்.
இவர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘புலி முருகன்’ அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படம் கேரளாவில் சுமார் 220 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகவுள்ளது.
இதில் 150 தியேட்டர்களில் சிறப்புக்காட்சி வேண்டுமென்று அடம்பிடித்து அனுமதி வாங்கிவிட்டார்களாம் ரசிகர்கள்.
இதனால் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகி விட்டதாம்.
இதன் மூலம் மலையாள சினிமாவில் ‘புலி முருகன்’ மோகன்லால் ஒரு புதிய ட்ரெண்டை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.