தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் எம்.எம்.கீரவாணி.
இவர் ஏற்கனவே தமிழ் படங்களில் மரகதமணி என்கிற பெயரில் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு, இந்தி, தமிழ் உள்பட சுமார் 220 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் இவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றே சொல்லலாம்.
பாகுபலி படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார்.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கும் இவர் தான் இசை.
இந்த நிலையில் ஒரு பேட்டியின்போது விரைவில் தான் இசைத்துறையை விட்டு ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார் கீரவாணி.