தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள மங்கை மஞ்சிமா மோகன் தமிழில் அறிமுகம் ஆகப்போகும் படம் அச்சம் என்பது மடமையடா.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த வாரம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் தற்போது கலந்துரையாடி வருகிறார் மஞ்சிமா. அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில்
ரஜினிகாந்தை பற்றி ஒருவர் கேட்டபோது…
அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.
விஜய்யை பற்றி ஒரு வார்த்தை என கேட்டபோது… விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அவருடன் விரைவில் நடிக்க ஆசை.
அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சிரமமப்பட்டேன்.
சிம்புவுடன் மீண்டும் நடிப்பீர்களா? என கேட்டதற்கு… “நிச்சயமாக நடிப்பேன். அவர்தான் மீண்டும் நடிப்பாரா? என சொல்ல வேண்டும்.
அவர் ஒரு யதார்த்த நடிகர். சிறந்த மனிதர்” என்றார்.
தனுஷ் பற்றி கேட்டபோது… அவர் திறமைகள் நிறைந்தவர் என்றார்.
பின்னர் நடிகைகளிடம் வழக்கம்போல் நீங்கள் நடிகையாக வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் என ஒருவர் கேட்டார்? அதற்கு டான்ஸர் ஆகியிருப்பேன் என்றார்.