தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் சிறை கைதிகள் செல்போன் வைத்திருப்பார்கள். அதை ரஜினி கேட்கும்போது தென்னிந்தியாவில் கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று மற்றொரு போலீஸ் கூறுவதாக காட்சி இருக்கும். அதற்கு ரஜினி ஓஹ்ஹோ… என கலாய்த்து இருப்பார்.
மேலும் இந்த காட்சிக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார்… ’பணம் பாதாளம் வரை பாயும். சில நேரம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கருத்து நல்ல கருத்துதான்” என ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வினய்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது..
“வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்க தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்த வசனத்தை நீக்க வேண்டும்.
அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதாரமின்றி அமைச்சர் ஜெயக்குமார் பேசினால் அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Lawyer condemns Sasikala dialogue in Rajinis Darbar