தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிப்பு, நடனம், இயக்கம் என ஓய்வில்லாமல் உழைத்து வருகின்ற போதிலும், சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருபவர் லாரன்ஸ்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு உதவிகளை வழங்கினார்.
இவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா நாளை வெளியாகும் என கூறப்படும் நிலையில் தற்சமயம் கூட சில வழக்குகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மகளிர் தினத்தில் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, தன் கட்டி வரும் அம்மா கோயிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த கோயிலை வருகிற தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில் ஏப்ரல் 14ஆம் தேதி திறக்கவிருக்கிறாராம்.
இதில் கலந்துக் கொள்ள ரஜினியை அழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lawrances amma temple opening ceremony on 14th april 2017