THE POWER MAGNET ARRIVES MIDNIGHT சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டர் மாஸ் அப்டேட்

THE POWER MAGNET ARRIVES MIDNIGHT சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டர் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர்.

ரஜினியின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். 1980-90-களில் ஜீவிதா பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது தான் முதன்முறையாக ரஜினியுடன் ஜீவிதா நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “34 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நாட்களள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இன்று மே 7 ஞாயிறு தங்களது ட்விட்டர் பக்கத்தில் லால் சலாம் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதில் ” நமது பாய் மும்பைக்கு திரும்பியுள்ளார்” என குறிப்பிட்டு இன்று நள்ளிரவு லால் சலாம் படத்தில் ரஜினி கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் மும்பை மாநகரம் இடம்பெற்று இருக்கும். அதில் பாட்ஷா பாய் பாம்பே நகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. எனவே ‘லால் சலாம்’ படத்திலும் இந்த கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

#LalSalaam – Superstar #Rajinikanth’s Name & Character Look Reveal at 12AM Tonight..🔥 (08/05/23) l #filmistreet

Waiting..🤩 Bhai is Back to #Mumbai..🤙 Guess name.?!

THE MAN ..THE MANIDHAN…THE POWER MAGNET ARRIVES MIDNIGHT… #Thalaivar #Appa ❤️ # lalsalaam

https://t.co/hX445p0ZLa

Lal Salaam Rajini character look will be released on 8th May midnight

‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த நாயகன் அருள்நிதி

‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த நாயகன் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சை.கௌதமராஜ்.

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், நடிகர் அருள்நிதி இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ’கழுவேத்தி மூர்க்கன்’ படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என பதிவிட்டுள்ளார்

மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டிருந்தார்கள்

கழுவேத்தி மூர்க்கன்

Arulnithi’s ‘Kazhuvethi Moorkkan’ for May release

ஏவிஎம் நிறுவன மியூசியம்.; ஸ்டாலின் – கமல் – வைரமுத்து பங்கேற்பு.; நீங்களும் பார்க்கலாம்

ஏவிஎம் நிறுவன மியூசியம்.; ஸ்டாலின் – கமல் – வைரமுத்து பங்கேற்பு.; நீங்களும் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை எடுத்து தயாரித்த பிரபல நிறுவனம் ஏவிஎம்.

கடந்த 80 ஆண்டுகளாக தயாரிப்பு துறையில் இருக்கும் இந்த நிறுவனம் ஐந்து தென்னிந்திய முதல்வர்களை வைத்து படம் எடுத்து உள்ளனர்.

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி ரஜினி, கமல் முதல் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இவர்கள் தயாரித்துள்ளனர்.

இந்திய சினிமாவே பெருமைப்படும் வகையில் பல படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது தங்கள் தயாரித்த படங்களில் பயன்படுத்திய கார்கள் பைக்குகள் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பயன்படுத்திய பொருட்களை தற்போது பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதற்கு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் (AVM HERITAGE MUSEUM) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த அருங்காட்சியததை தமிழக முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, வடபழனி, ஏவிஎம் ஸ்டுடியோஸ், 3ஆவது அரங்கில் இன்று (07.05.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தினை “(AVM Heritage Museum) திறந்து வைத்தார்.

அதோடு அருங்காட்சியததை முழுமையாக பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R. பாலு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. நடிகர் கமல்ஹாசன். நடிகர் சிவகுமார் இயக்குனர் S.P.முத்துராமன் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு AVM நிறுவனத்தின் தலைவர் சரவணன் அவர் மகன் குகன் அருணா குகன் மற்றும் இயக்குனர் S.P.முத்துராமன் வரவேற்றனர்.

இந்த அருங்காட்சியத்தில் A.V. மெய்யப்ப செடடியார் பயன்படுத்திய கார் அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களில் உபயோகப்படுத்திய பொருள்களும் இந்த அருங்காட்சியத்தில் இடம் பிடித்து உள்ளது.

இந்த அருங்காட்சியத்தை பொது மக்கள் பார்வையிட முடியும். இதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். செவ்வாய்கிழமை & விடுமுறை தினங்களில் மட்டும் விடுமுறை.

பார்வையாளர்களுக்கு இதுவரை கட்டணம் விதிக்கப்படவில்லை. அது ரூபாய் 100 முதல் 200 வரை இருக்கும் எனவும் குடும்பமாக வருபவர்களுக்கு கட்டணத்தில் சலுகை இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

AVM Heritage Museum inaugurated by CM Stalin

அப்போ ’ஜாகுவார்’ பட குழந்தை நட்சத்திரம்.; இப்போ ஐஸ்வர்யா கவுடாவுக்கு ‘எங்கேஜ்மெண்ட்’

அப்போ ’ஜாகுவார்’ பட குழந்தை நட்சத்திரம்.; இப்போ ஐஸ்வர்யா கவுடாவுக்கு ‘எங்கேஜ்மெண்ட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா கவுடா, பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

’ஜாகுவார்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா கவுடா, வளர்ந்து நடிகையாக வலம் வருவதோடு, தனது திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் ‘பிரவீணா’-வில் தனது நடிப்பு மூலம் பாராட்டுகளைப் பெற்ற ஐஸ்வர்யா கவுடா, விரைவில் வெளியாக இருக்கும் ‘ரேவ் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா கவுடாவின் திறமையை கவனித்த இயக்குநர் ராஜு போனகானி, பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தில் அவரை நாயகியாக தேர்வு செய்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் அரசியலின் இருண்ட பாதையில் செல்லும் இளைஞர்களின் கதையை சொல்லும் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘ரேவ் பார்ட்டி’ கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், ராஜு பொங்கானி இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

’ரேவ் பார்ட்டி’ திரைப்படம் வெளியான பிறகு நடிகை ஐஸ்வர்யா கவுடா, தென் இந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக உருவெடுப்பார் என்று படக்குழு கூறி வந்த நிலையில், அவர் மற்றொரு பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமான ‘எங்கேஜ்மெண்ட்’-ன் நாயகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வாய்ப்பு பற்றி நடிகை ஐஸ்வர்யா கவுடா கூறுகையில்…

“சிறு வயதில் இருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு ‘ஜாகுவார்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன் பிறகு ‘பிரவீணா’ படமும் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

தற்போது ‘ரேவ் பார்ட்டி’ படத்தில் எனது திறமையை பார்த்து இயக்குநர் ராஜு போனாகானி ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. ‘எங்கேஜ்மெண்ட்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.

ஐஸ்வர்யா கவுடாவு

Actress Aishwarya Gauda and Raju in Engagement

‘யாத்திசை’ சாம்சனுக்கு எல்லா திசையிலும் குவியும் வாய்ப்புகள்

‘யாத்திசை’ சாம்சனுக்கு எல்லா திசையிலும் குவியும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது சரித்திர கால படங்களின் சீசன். நிறைய சரித்திர கால படங்களை நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் இதுவரை சொல்லப்படாத ஒரு புதுமையான கதையாக ஒரு திரைப்படமாக சமீபத்தில் வெளியான படம் ‘யாத்திசை’.

சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பாண்டிய கால வரலாறை மிகவும் தத்துரூபமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தனர் படக்குழுவினர்.

முக்கியமாக புது முகங்களை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்டத்தை தங்களால் கொடுக்க முடியும் என தமிழ் சினிமாவுக்கு இந்த படம் சவால் விட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

இதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரியாக நடித்திருந்தார் சாம்சன். இவரின் யதார்த்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இவரின் சொந்த ஊர் பாலக்காடு. கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து லயோலாவில் டிப்ளமோ கோர்ஸ் முடித்து விட்டு, சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.

கிடைத்ததோ சிறு சிறு வேடங்கள்தான். அதில் முக்கியமானது, நாகாவின் அனந்தபுரம் வீடு. இருந்தாலும் சளைக்காமல் பல இயக்குனர்களை சந்தித்து இருக்கிறார்.

இவரது நண்பர் சுரேஷ்குமார், காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். அவர் மூலம் தான் ‘யாத்திசை’ இயக்குனர் தரணி ராசேந்திரனை சந்தித்து இருக்கிறார்.

அதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரிக்கான காஸ்ட்யூம்களை போடச் சொல்லி இருக்கிறார். மிகப் பொருத்தமாக இருக்கவே படப்பிடிப்புக்கு செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருக்கிறார்.

யாத்திசை படம் பார்த்த நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாராட்டுக் கால்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். அடுத்து ஆறு படங்கள் கமிட் ஆகி இருக்கிறது. மலையாளம் தெரியும் என்பதால் சில மலையாளப் பட வாய்ப்புகளும் வந்திருக்கிறதாம்.

மார்ஷியல் ஆர்ட்ஸ், களறி பயின்றவர். கிரிக்கெட், அத்லடிக், த்ரோ பால் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்றவர் சாம்சன்.

கலக்குங்க யாத்திசை சாம்சன்… யாத்திசை என்றால் தென் திசை என்று அர்த்தம். இனி எல்லா திசையிலும் கலக்குங்க சாம்சன்.

Lot of opportunities for yaathisai samson after its release

கீர்த்தியுடன் செகன்ட் டைம்.. இளையராஜாவுடன் ப்ளாக்பஸ்டர் மொமண்ட் – நாக சைதன்யா

கீர்த்தியுடன் செகன்ட் டைம்.. இளையராஜாவுடன் ப்ளாக்பஸ்டர் மொமண்ட் – நாக சைதன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் மே 12ல் உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் நேற்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

அப்போது நடிகர் நாக சைதன்யா பேசியதாவது…

“‘கஸ்டடி’ படம் பேசுவதற்கு முன்பு மனோபாலா சாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இங்கு ‘கஸ்டடி’ பட டிரெய்லர் வெளியிடுவதில் மகிழ்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெங்கட்பிரபு சார் என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னபோது எக்சைட்மெண்ட்டாக இருந்தது.

அதே நம்பிக்கை இப்போது பட வெளியீடு வரை இருக்கிறது. அரவிந்த்சாமி சாரை சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமை.

கீர்த்தியுடன் இரண்டாவது படம் எனக்கு. ப்ளாக்பஸ்டர் மொமண்ட் என்றால் அது இளையராஜா சார் இசைதான். வெங்கட்பிரபு சார் என்றால் யுவன் இசைதான். இப்பொழுது இளையராஜா சாரும் கூட இருக்கிறார் என்பது பெருமை.

தொழில்நுட்பக்குழு அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போல டிரெய்லரும் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். வெங்கட்பிரபு சாரின் வழக்கமான ஸ்டைல் இதில் மிஸ் ஆகாது. படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

இதன் பிறகு பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்.

2nd time with krithi shetty . Block buster moment with Ilayaraja says Naga Chaitanya

More Articles
Follows