மீண்டும் தனுஷ் உடன் இணையும் அனிருத்

மீண்டும் தனுஷ் உடன் இணையும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Anirudh combo to reunite in 201930 வருடங்களுக்கு முன்பு இளையராஜா இசையில்லை என்றால் நடிகர் மைக் மோகன் படங்கள் இருந்திருக்குமா? என்று தெரியாது.

அதுபோல் ராமராஜன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரின் படங்களையும் சொல்லலாம்.

இவர்களின் படங்களுக்கு வெற்றிக்கு முதல் காரணமே இளையராஜாவின் பாடல்கள் என்பதுதான் உண்மை.

அதுபோல் நடிகர் இசையமைப்பாளர் கூட்டணி அண்மையில் அமைந்தது என்றால் அது தனுஷ், அனிருத் கூட்டணியை சொல்லலாம்.

3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

இந்த கூட்டணியை DnA என்று செல்லமாக ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் இரண்டு வருடங்களாக தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை.

இந்நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் அடுத்த வருடத்தில் (2019) கண்டிப்பாக DnA கூட்டணி அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Dhanush and Anirudh combo to reunite in 2019

புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் பிரபல தியேட்டரின் விபரீத முடிவு

புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் பிரபல தியேட்டரின் விபரீத முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Due to Cinema strike Theatre closed and they changing as Marriage hallதமிழ் திரையுலகம் தன் துறை சார்ந்த எத்தனையோ போராட்டங்கள் மற்றும் ஸ்டிரைக் ஆகியவற்றை சந்தித்துள்ளது.

ஆனால் இதுவரை இல்லாத நிலையில் தற்போது 5 வாரங்களாக (மார்ச் 1 2018 முதல்) எந்த புதுப்படங்களும் வெளியாகவில்லை.

மேலும் சினிமா விழாக்கள், சூட்டிங் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வையும் நடக்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துவிட்டார்.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி தியேட்டர்களில், மற்ற மொழி புதுப்படங்களையும், பழைய ஹிட்டான தமிழ் படங்களையும் திரையிட்டு வருகின்றனர்.

இதனால் எந்த தியேட்டரும் ஹவுஸ்புல் ஆகவில்லை.

இதனால் தியேட்டர்கள் தொழிலாளர்களும் வேலை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டர் நிர்வாகம், இனி இந்த தொழில் சரி வராது என்ற முடிவில் தியேட்டரை திருமண மண்டபமாக மாற்றவிருக்கிறார்களாம்.

மேலும் அங்குள்ள ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகையையும் கொடுத்துவிட்டார்களாம்.

இப்படியே போனால் மற்ற தியேட்டர் நிர்வாகத்தினரும் இந்த முடிவையே எடுப்பார்கள்.

எனவே திரையுலகம் விழித்துக் கொண்டு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விரைவில் முடிவு கொண்டு வருவதே நல்லது என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Due to Cinema strike Theatre closed and they changing as Marriage hall

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் சிவகார்த்திகேயன் & ராஜேஷ்.?

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் சிவகார்த்திகேயன் & ராஜேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajesh nayantharaபொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக ரகுல் பிரித்தி சிங் நடிப்பார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டூடீயோ கிரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவாகார்த்திகேயன்.

இப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என தகவல்கள் வந்தன.

ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா.

அதுபோல் ராஜேஷ் இயக்கிய பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara again team up with Sivakarthikeyan and Rajesh

காவிரி-ஸ்டெர்லைட் பிரச்னைக்காக ஏப்ரல் 8ல் நடிகர் சங்கம் போராட்டம்

காவிரி-ஸ்டெர்லைட் பிரச்னைக்காக ஏப்ரல் 8ல் நடிகர் சங்கம் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam protest for Sterlite and Cauvery Management Board issuesதென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

இது குறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம். ” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

# தென்னிந்திய நடிகர் சங்கம்

Nadigar Sangam protest for Sterlite and Cauvery Management Board issue

Note: நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6மணி தான் போலீஸ் அனுமதி கோரப்பட்டது. அதற்கு காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கிடைக்க பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடி; காவிரிக்காக சென்னை.. போராட்டக்களத்தில் அபிசரவணன்

ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடி; காவிரிக்காக சென்னை.. போராட்டக்களத்தில் அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan participating in both Sterlite and Cauvery protestவிவசாயிகள் போராட்டம், நலிந்த கலைஞர்களுக்கு உதவி என எப்போதும் பரபரப்பாக காணப்படுபவர் நடிகர் அபிசரவணன்.

தற்போது தமிழகத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் கலந்துக் கொண்டுள்ளார்.

அது குறித்த செய்திகளை அவரே நம்மிடம் பகிர்கிறார்..

தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி கொண்டிருக்கும் எமது மக்களை காண #JOINTFORCARE TEAM தூத்துகுடி பயணமானோம்… நமது குழுவை சார்ந்த செலவம் ராமசாமி மற்றும் நண்பர்கள் கணேஷ் மலைராசாவுடன் தேவையான உணவுபொருட்களான பிஸ்கட் பிரட் பழங்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு சென்றோம் . பிரிடடிஷ் பேக்கரி உரிமையாளர் பிரட்களுக்கு பணம் வாங்க மறுத்துவிட்டார்…

செல்லும்வழியில் காரின் கண்ணாடிகதவுகளை இறக்கிவிட்டு சென்றபோது ஸ்டெர்லைட் பணியை நிறுத்தி இரு நாட்களாகியும் காற்றின் நெடி கண்களில் எரிச்சலையும், தொண்டை நமச்சலையும் இரண்டு நிமிடங்களில் பரிசளித்தது எனில் இருபத்திஇரண்டு வருடங்கள் இந்த மக்களின் வாழ்க்கை?

போராட்டகளத்தை அடைந்தபோது ஒரு வேம்பு மரத்தின் கீழ் மக்கள் அமர்ந்திருந்தனர்…ஸ்டெரலைட் எதிரான போராட்டத்தில் அவர்களுடன் நமது #JOINTFORCARE குழுவும இணைந்து கொண்டது..

நடிகர் அரசியல் கட்சிதலைவர் சரத்குமார் அவர்களம் அங்கு சிறிதுநேரத்தில் வந்தார்… நாம் போராட்ட களத்திலிருந்து கிளம்பினோம்..

அரசியல்கட்சிகள் இருக்கும் இடத்த்தில் நமக்கு வேலை இல்லையே … என அந்த ஊரின் அடிகுழாயை தேடி சென்றோம்… தண்ணீரை குடித்து பார்த்தோம்.. மக்களின் கொந்தளிப்பிற்கான காரணம் புரிந்தது … மேலும் அங்கு உள்ள நான்கைந்து வீட்டிற்க்குசென்று அந்த மக்களிடம் போராட்டத்திற்கு வராதது குறித்துகேட்டறிந்தோம்…

மீண்டும் கட்சிகரைவேட்டிகள் கிளம்யவுடன் மீண்டும் போரட்டகளத்தை அடைந்தோம் அங்குள்ள சிறுவர் சிறுமிகள் மற்றும் வயதானவர்ளிடயே பாதிப்பு குறித்து கேட்டறிந்தோம்….மிகவும் மோசமான உடல் பாதிப்புகளை அடைந்துள்ளனர்.

அன்பான மக்கள் அங்கே சமைத்து அனைவருக்கும் உணவளிக்க தயாரானார்கள்…போராட்டத்திற்கு வந்தாரை உபசரித்து, உணவளிதத பழகிய அவர்களை உட்காரவைத்து உணவுகள் பரிமாரினோம்.. அகமகிழ்ந்த மக்கள் நம்மையும் அமரவைத்து உணவளித்தனர்…அவர்களுடனே போராட்ட களத்தில் இருந்து ஆதரவு தெரிவித்த போது சென்னையில் இளைஞர்கள் காவிரிக்காக மெரினாவில் கூடுவதாக வந்த தகவலை அடுத்து சென்னை பயணமானோம்….

ஸ்டெரலைட் ஆலை மூடுவிழாவிற்கு
மீண்டும் வருவோம் என்ற உறுதியோடு விடைபெற்றோம்..

Actor Abi Saravanan participating in both Sterlite and Cauvery protest

abi saravanan in sterlite protest

சன் டிவிக்காக நிஜத்திலும் இணையும் ரஜினி-விஜய்

சன் டிவிக்காக நிஜத்திலும் இணையும் ரஜினி-விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Vijay may participate in Sun TV 25th year grand functionரஜினிக்கு அடுத்து தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய் என்றால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்கின்றனர்.

ரஜினி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் நடிக்கும் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சன் டிவி தயாரிக்கும் படங்களில் இணைந்த இவர்கள் மற்றொரு நிகழ்ச்சியில் இணைந்து மேடையேற உள்ளனர்.

சன் டிவி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

அதில் ரஜினி மற்றும் விஜய் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini and Vijay may participate in Sun TV 25th year grand function

More Articles
Follows