சட்டத்திற்கு கட்டுப்படாத அணியை அமைத்து விக்ரம் – கௌதமேனன் கூட்டணி

சட்டத்திற்கு கட்டுப்படாத அணியை அமைத்து விக்ரம் – கௌதமேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படம் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த படம் சமீபத்தில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.

‘லியோ’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரித்து வர்மா, பார்த்திபன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 24 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு அணியை விக்ரம் தலைமையில் அமைப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டிற்கு எதிரான தீய சக்திகளை அழிப்பதாக காட்சிகள் உள்ளது. ஜான் என்ற கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார்.

“ஹே பாடு. நான் வரேன்டா…” என அவர் பேசும் வசனத்துடன் இந்த ட்ரெய்லர் முடிகிறது.

Vikram starrer Dhruva Natchathiram Trailer goes viral

விஜய் பாடி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் மீண்டும் கூட்டணி

விஜய் பாடி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரிகளில் ஒருவர் மதன் கார்க்கு. இவர் சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது தளபதி 68 படத்தில் பாடல் எழுத உள்ளார்.

இது குறித்து அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதுள்ளதாவது…

அஸ்கு லஸ்க்கா.. கூகுள் கூகுள்.. செல்பி புள்ள ஆகிய பாடல்களை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைகிறேன். இது தொடர்பாக வெங்கட் பிரபு & யுவன் ஆகியாரை சந்தித்தது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

Google google பண்ணிப்பார்த்தேன்… செஃல்பி புள்ள… ஆகிய பாடல்களை விஜய் பாடி இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே விரைவில் விஜய் – மதன் கார்க்கி கூட்டணியில் ஒரு அருமையான சூப்பர் ஹிட் பாடலை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Famous lyricist teams up with Vijay in Yuvan music

சந்தோஷத்தில் என் இதயம் துடிக்கிறது.; அமிதாப்புடன் இணைந்த ரஜினி நெகிழ்ச்சி

சந்தோஷத்தில் என் இதயம் துடிக்கிறது.; அமிதாப்புடன் இணைந்த ரஜினி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தை முடித்துவிட்டு ‘லால்சலாம்’ படத்தில் நடித்தார் ரஜினிகாந்த் .

இப்படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. தற்போது ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இதன் படப்பிடிப்பு கேரள மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதி மக்கள் ரஜினியை மகிழ்ச்சியுடன் வரவேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தற்போது ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் அங்கு சென்றார்.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 25ஆம் தேதி அமிதாப்பச்சனின் உடன் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது…

” 33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்கிறேன். என் இதயம் சந்தோஷத்தில் துடிக்கிறது” என ரஜினிகாந்த் அமிதாப்பச்சயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அமிதாப்- ரஜினி

Rajini excited with Amithab at Thalaivar 170 spot

நயன்தாராவின் 75 வது பட டைட்டில் வெளியீடு.; மீண்டும் ஜெய்க்கு ஜோடியானார்.!

நயன்தாராவின் 75 வது பட டைட்டில் வெளியீடு.; மீண்டும் ஜெய்க்கு ஜோடியானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ‘ஜவான்’ படத்தின் மூலம் ஹிந்தியிலும் பிரபலமானார்.

சினிமா தவிர பெண்கள் சம்பந்தமான அழகு பொருட்கள் வியாபாரத்தையும் செய்து வருகிறார் நயன்தாரா.

ஒரு பக்கம் தொழிலதிபராக ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா மற்றொருபுறம் சினிமாவிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாராவின் 75வது படத்தின் டைட்டில் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் 75-வது படத்திற்கு ‘அன்னபூரணி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ், டிரைடெண்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

அன்னபூரணி

Nayantharas 75th movie titled Annapoorani

‘சூர்யாவின் சனிக்கிழமை’-யில் இணைந்த நானி – பிரியங்கா – சூர்யா

‘சூர்யாவின் சனிக்கிழமை’-யில் இணைந்த நானி – பிரியங்கா – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் திரைப்படமான ‘அந்தே சுந்தரனிகி’ முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், இரண்டாவது படைப்பான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஒரு தனித்துவமிக்க அதிரடி மற்றும் மாஸான ஆக்சன் அவதாரத்தில் நானி வழங்கிய அன்செயின்ட் Unchained எனும் வீடியோ மக்களை உற்சாகப்படுத்தியது.

டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.‌

சூர்யாவின் சனிக்கிழமை

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனும் திரைப்படம் இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் டி வி வி தனய்யா படத்தின் திரைக்கதையை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.‌ முதல் ஷாட்டிற்கு தில் ராஜு கேமராவை சுவிட்ச் ஆன் செய்து தொடங்கி வைக்க, இயக்குநர் வி. வி. விநாயக் கிளாப் போர்டு அடிக்க, எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.

ஒரு பிரத்யேக ஜானரிலான கதைகளில் மட்டும் நடிப்பதில் நானி தன்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அவரும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடிக்கிறார்.

சூர்யாவின் சனிக்கிழமை

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன், பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கார்த்திகா ஸ்ரீனிவாஸ் பட தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்பது பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சூர்யாவின் சனிக்கிழமை

Nani starrer Suryavin Sanikizhamai Launched Grandly

ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ பட அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ பட அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘லால் சலாம்’ படம் 2024 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் படபிடிப்பு சமீபகாலமாக கடந்த சில தினங்களாக கேரளா திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அவர் விமான நிலையம் சென்ற போது செய்தியாளர்களிடம் தலைவர் 170 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

“ஞானவேல் இநக்கும் படம் விறுவிறுப்பாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்காக செல்கிறேன்” என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth gave update about Thalaivar 170

More Articles
Follows