‘கபாலி-தெறி’ தீபாவளி ஸ்பெஷல் ஷோ… எது ஹவுஸ்புல்.?

‘கபாலி-தெறி’ தீபாவளி ஸ்பெஷல் ஷோ… எது ஹவுஸ்புல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali theri rajini vijayஇவ்வருடத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான ரஜினியின் கபாலி மற்றும் விஜய்யின் தெறி ஆகிய இரு படங்களையும் கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

தெறி ரிலீஸ் ஆகி 200 நாட்களையும், கபாலி ரிலீஸ் ஆகி 100 நாட்களையும், கடந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் சென்னை உள்ள பிரபல தியேட்டரில் இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

தெறி படத்திற்கு 800 டிக்கெட்டுக்களும் கபாலி படத்திற்கு 900 டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டுள்ளது.

தெறியை விட கபாலிக்கு அதிக ஆடியன்ஸ் வந்திருந்தார்களாம்.

விஜய்-சூர்யாவின் ராசி ஜோடியை கைப்பற்றிய விஜய்சேதுபதி

விஜய்-சூர்யாவின் ராசி ஜோடியை கைப்பற்றிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha-1ஜாக்கி ஷெரஃப், ரவிகிருஷ்ணா, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார்.

இவர் இப்படத்திற்கு சிறந்த புதுமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர்.

இவர் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.

இதில் சமந்தா இவருக்கு ஜோடியாகிறார்.

விஜய்யின் தெறி, கத்தி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்றவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 10… ‘தெறி’க்க விட காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

நவம்பர் 10… ‘தெறி’க்க விட காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith fansஅஜித் நடிப்பில் எந்த படங்களும் இந்தாண்டு வெளியாக போவதில்லை.

எனவே இந்த தீபாவளியை கூட அஜித் ரசிகர்கள் துக்க தீபாவளி என்றனர்.

இந்நிலையில் வருகிற நவம்பர் 10ஆம் தேதி அன்று அஜித்தின் வேதாளம் படத்தை திரையிட போகிறார்களாம்.

இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ளது.

எனவே, ரசிகர்களுக்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிடுகின்றனர்.

இதற்கு இப்போதே ரிசர்வேசன் தொடங்கிவிட்டதாம்.

அப்போ கடந்த ஆண்டைப் போல இந்த வருஷமும் தெறிக்க விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஜினியின் ‘மெகா’ விருந்து

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஜினியின் ‘மெகா’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stillsஓரிரு தினங்களுக்கு முன்பு கபாலி படத்தின் 100வது நாளை ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிலையில், ஷங்கர் இயக்க, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 20ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இதனை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து, டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது.

இதனை வழக்கம்போல தடபுடலா கொண்டாட இவர்கள் தயாராகி வரும் நிலையில், அன்று சூப்பர் ஹிட் படமான பாட்ஷாவின் ட்ஜிட்டல் வெர்ஷனை வெளியிட இருக்கிறார்களாம்.

 

தனுஷின் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்; திமிராக சொல்ல தகுதியானவர் யார்.?

தனுஷின் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்; திமிராக சொல்ல தகுதியானவர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush maariதனுஷின் சினிமா கேரியரில் மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் காதல் கொண்டேன்.

இப்படத்தை இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்களின் கூட்டணி, புதுப்பேட்டை மற்றும் மயக்க என்ன ஆகிய படங்களில் இணைந்தது.

தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி அடுத்த ஆண்டு இணைய உள்ளதாம்.

இதனை தனுஷ் சமீபத்திய டிவி பேட்டியில் தெரிவித்தார்.

அப்போது “என்னுடைய வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என திமிராக சொல்ல தகுதியானவர் என் அண்ணன் செல்வராகவன் மட்டுமே” என்றார்.

‘சிகரெட்-தண்ணி அடிக்காதே…’ ரஜினிக்கு சிவகுமார் அட்வைஸ்

‘சிகரெட்-தண்ணி அடிக்காதே…’ ரஜினிக்கு சிவகுமார் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth sivakumarதிரை உலகைத் தாண்டியும் அனைவரிடமும் நல்ல மனிதர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார்.

இவர் அண்மையில் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்தும் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்….

“நான் சிவக்குமாருடன் புவனா ஒரு கேள்விக்குறி மற்றும் கவிக்குயில் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.

அவருடைய பழகிய நாட்களை மறக்க முடியாது.

அப்போது புகை மற்றும் மது பழக்கங்களுக்கு நான் அடிமையாக இருந்த நேரம்.

அப்போதெல்லாம் ரஜினி நீ பெரிய நடிகனா வருவ. இந்த பழக்கத்தால உன் உடம்பை கெடுத்துக்காதே என்பார்.

என்னடா இந்த ஆளு, நிம்மதியா இருக்க விடமாட்டுறாரு. அப்படின்னு சில சமயங்களில சலிப்பா இருக்கும்.

அவர் நல்ல மனிதர். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் சொன்னது பலித்தது.

நான் பெரிய நடிகன் ஆனேன். அவர் பேச்சை கேட்காததினால் என் உடம்பை கெடுத்து கொண்டேன்.

இன்னைக்கு அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை.

அவர் சொல்கிறபடி நடந்துகிட்டா ஆரோக்யமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்.

இந்த மாபெரும் கலைஞன் நீடுழி வாழ ஆண்டவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.”

என்று இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளார்.

rajin letter to sivakumar for his 75th birthday

More Articles
Follows