தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் இவர். ஆனால் உலகளவில் தெரிந்த இயக்குனராகி விட்டார்.
தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டாரையே இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவர்தான் ரஞ்சித்.
தன் முதல் படமான அட்டக்கத்தி மூலம் தினேஷ் என்ற ஹீரோவை உருவாக்கினார்.
மெட்ராஸ் படம் மூலம் கலையரசன் என்ற ஹீரோவை உருவாக்கி, இன்று பெரும்பாலான படங்களில் அவர் நாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது கபாலி மூலம் விஷ்வந்த் என்பவரை ஹீரோவாக்கி விட்டார் என்கிறார்கள் கோலிவுட் வல்லுனர்கள்.
விரைவில் விஷ்வந்தையும் படங்களில் நாயகனாக பார்க்கலாம் என்றே தெரிகிறது.
பின்குறிப்பு : கபாலி படத்தில் சென்னை விமான நிலையத்தில் ரஜினியைப் பார்த்ததும் மெட்ராஸ்காரங்க, நம்புங்க சார் என்பாரே அவர்தான் விஷ்வந்த்.