மூன்று ஹீரோக்களை உருவாக்கிய ‘கபாலி’ ரஞ்சித்

மூன்று ஹீரோக்களை உருவாக்கிய ‘கபாலி’ ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ranjithமூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் இவர். ஆனால் உலகளவில் தெரிந்த இயக்குனராகி விட்டார்.

தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டாரையே இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவர்தான் ரஞ்சித்.

தன் முதல் படமான அட்டக்கத்தி மூலம் தினேஷ் என்ற ஹீரோவை உருவாக்கினார்.

மெட்ராஸ் படம் மூலம் கலையரசன் என்ற ஹீரோவை உருவாக்கி, இன்று பெரும்பாலான படங்களில் அவர் நாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது கபாலி மூலம் விஷ்வந்த் என்பவரை ஹீரோவாக்கி விட்டார் என்கிறார்கள் கோலிவுட் வல்லுனர்கள்.

விரைவில் விஷ்வந்தையும் படங்களில் நாயகனாக பார்க்கலாம் என்றே தெரிகிறது.

பின்குறிப்பு : கபாலி படத்தில் சென்னை விமான நிலையத்தில் ரஜினியைப் பார்த்ததும் மெட்ராஸ்காரங்க, நம்புங்க சார் என்பாரே அவர்தான் விஷ்வந்த்.

கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி டேட் உண்டா?

கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி டேட் உண்டா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh stillsஒரு சில நடிகைகள் மட்டும்தான் குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு மிகப்பொருத்தமாக இருப்பார்கள்.

அப்படி வந்துள்ள மலையாள கரையோர வைங்கிளிதான் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் இவர் தனுஷ் உடன் நடித்துள்ள தொடரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது லிப் லாக், கிளாமர் ரோல்கள் குறித்து அவரிடம் கேட்டதற்கு,

நான் லிப் லாக் மற்றும் கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று கொள்கை வைத்திருக்கிறேன்” என்று கூறினார் .

நடிகைகள் அறிமுகம் ஆகும் போது, இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பார்கள். பின்பு, அதுபோன்ற வேடங்களில் நடித்த பல வரலாறு உண்டு.

ஹ்ம்… கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி தேதி உள்ளதா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சென்னை திரும்பிய அஜித்; நெக்ஸ்ட் என்ன ப்ளான்..?

சென்னை திரும்பிய அஜித்; நெக்ஸ்ட் என்ன ப்ளான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stillsசிவா இயக்கும் அஜித் படத்திற்கு இதுவரை தலைப்பிடப்படவில்லை.

எனவே தற்காலிமாக ஏகே 57 என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

இதன் பூஜையை தொடர்ந்து, ஆஸ்ட்ரியா மற்றும் பல்கேரியா ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி தற்போது சென்னை வந்துள்ளனர்.

முதற்கட்ட படப்பிடிப்பில் சில ஆக்ஷன் காட்சிகள், காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், சிறிது காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார்களாம்.

இதன்பின்னர் அமெரிக்கா, லண்டன் மற்றும் இந்தியாவில் இதன் படப்பிடிப்பை தொடர இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் இல்லன்னா உதயநிதி; ஆர்கே. சுரேஷின் நெக்ஸ்ட் மூவ்

விஜய் இல்லன்னா உதயநிதி; ஆர்கே. சுரேஷின் நெக்ஸ்ட் மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil villain rk sureshதாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியவர் ஆர்.கே.சுரேஷ்.

விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்தவர் இவர்தான்.

இதனிடையில் பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட செய்தியை இவர் மறுத்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இதனையடுத்து, லைக்கா நிறுவனம் தயாரிக்கும் உதயநிதி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இப்படத்தை கௌரவ் இயக்க, நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இதில் மஞ்சிமாவின் உறவினராக ஆர்.கே.சுரேஷ் நடிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.

எழில் இயக்கும் படத்தை முடித்துவிட்டு உதயநிதி இதில் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஸ்வர்யாராய் மகளுக்கு சூப்பர் ஸ்டார் எழுதிய உருக்கமான கடிதம்

ஐஸ்வர்யாராய் மகளுக்கு சூப்பர் ஸ்டார் எழுதிய உருக்கமான கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rais daughterரஜினிகாந்தை நாம் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தாலும், அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது அமிதாப் பச்சனைதான்.

எழுவது வயதை கடந்தபோதும், இன்றும் செலக்டிவ்வான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து சினிமாவில் கோலோச்சி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய பேத்திகளான ஆராத்யா (ஐஸ்வர்யாராய் மகள்) மற்றும் நவ்யாவுக்கு ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதம் தன் இரு பேத்திகளுக்கு மட்டுமில்லை. இந்தக் கடிதம் எல்லா பேத்திகளுக்கும் உரியது என்று அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது..

என் அன்புக்குரிய நவ்யா, ஆராத்யாவுக்கு,

நீங்கள் இருவரும் உங்களின் மென்மையான தோள்களில் நீண்ட பாரம்பரியத்தின் மரபைச் சுமக்கிறீர்கள்.
ஆராத்யா, ஹரிவன்ஷ் ராய் பச்சன் (அமிதாப்பின் அப்பா) மரபையும், நவ்யா ஹச்.பி.நந்தா (அமிதாப்பின் மருமகன்) மரபையும் சுமக்கும் பெருமை அது.

உங்கள் இருவரின் தாத்தாக்களும் உங்களுக்கு அவர்களின் குடும்பப் பெயர்களோடு புகழ், கெளரவம் மற்றும் அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் நந்தாவாக இருக்கலாம். பச்சனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இருவரும் பெண்கள்!

நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே, மக்கள் அவர்களின் சிந்தனையையும், எல்லையையும் உங்கள் மேல் திணிப்பார்கள்.

நீங்கள் எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள்.

அவர்கள் கூறும் தீர்ப்பின் நிழலில் வாழாதீர்கள். உங்கள் சொந்த அறிவின் ஒளியில் உங்களுக்கான விருப்பங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் அணியும் ஸ்கர்ட்டின் நீளத்தை வைத்து உங்களின் குணத்தை மற்றவர்கள் நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள்.

உங்களின் நண்பர்களை அவர்கள் தேர்ந்தெடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்களே முடிவு செய்யுங்கள்.

உங்களின் திருமணம் குறித்து உங்களுக்குப் பிடித்தால் அன்றி மற்ற காரணங்களுக்காக ஒத்துக்கொள்ளாதீர்கள்.

amitab

மக்கள் ஏதாவது பேசுவார்கள். சில மோசமான விஷயங்களைப் பற்றிக்கூட கூறுவார்கள். அதற்காக அவற்றை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாதீர்கள்.

அந்நாளின் முடிவில், உங்களின் செயல்களுக்காக விளைவுகளை நீங்கள் மட்டுமே சந்திக்கப் போகிறீர்கள். அதனால் மற்றவர்கள் உங்களின் செயல்களில் தலையிட அனுமதிக்காதீர்கள்.

நவ்யா – உனக்குக் கிடைத்திருக்கும் பெயரும், புகழும் நீ சந்திக்கப்போகிற கஷ்டங்களில் இருந்து ஒருபோதும் பாதுகாக்காது. ஏனென்றால் நீ ஒரு பெண்.

ஆராத்யா – இதை நீ பார்த்துப் புரிந்துகொள்ளும்போது, உன் அருகில் நான் இல்லாமல் போகலாம். ஆனால் இன்று நான் சொல்வது உனக்கு நிச்சயம் பயன்படும்.

இந்த உலகம் ஒரு பெண்ணுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்ற பெண்களால்தான் அதை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

உங்களின் சொந்த எல்லைகளை வகுப்பதும், உங்களின் சொந்த விருப்பங்களைத் தேர்வு செய்வதும், மக்களின் அறிவுரைகளைத் தாண்டி எழுவதும் அத்தனை சுலபமில்லை. ஆனால் நீங்கள்… உங்களால் எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ முடியும்.

இதைச் செய்யுங்கள். நான் அடைந்த உயரத்தைக் காட்டிலும் அதிகம் செல்லுங்கள். நான் அமிதாப் பச்சன் என்று அறிவதைவிட, உங்களின் தாத்தா என்று அறியப்படவே ஆசைப்படுகிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

என்றும் உங்கள் அன்புடன்,
தாத்தா, பாட்டி.

‘பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை..’ பிரபல நடிகர் மறுப்பு

‘பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கவில்லை..’ பிரபல நடிகர் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa stillsபைரவா படத்தில் விஜய்யுடன் கீர்த்திசுரேஷ், அபர்ணா வினோத், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பரதன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதில் 3வது வில்லனாக பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து அவர் கூறியதாவது….

“நான் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மற்றபடி நான் பைரவா படத்தில் நடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார் இந்த மருது வில்லன் ஆர்.கே.சுரேஷ்.

More Articles
Follows