தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள படம் பொன்னியின் செல்வன்.
இதன் பட்ஜெட் மட்டும் கிட்டதட்ட ரூ. 750 கோடி என்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட உள்ளது. எனவே கிட்டதட்ட 2 அல்லது 3 பாகங்களாக தயாரிக்க இருக்கிறார்களாம்.
இதில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.
மேலும் பெரிய பழுவேட்டவரையராக மோகன்பாபு நடிக்கிறார்.
பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ்ம் நடிக்கவுள்ள நிலையில் பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை கேட்டு இருக்கிறார்களாம்.
அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்கிறது கோலிவுட்.