தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இருமுகன் படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
விக்ரம் இரு வேடம் ஏற்றுள்ள நிலையில் ஒன்றில் திருநங்கையாக நடித்துள்ளார்.
இது சயின்ஸ் கலந்த மெடிக்கல் சப்ஜெக்ட் படம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் 450 க்கும் மேற்பட்ட அரங்குகளில் இருமுகன் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 95 அரங்குகளிலும், பிரிட்டன், வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
ஆனால், காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் இப்படம் வெளியாகவில்லை.
இந்த பிரச்சினை ஓய்ந்த பிறகு இருமுகனை கர்நாடகாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அங்குள்ள விக்ரம் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.